×
 

இஸ்ரேலை சின்னாபின்னமாக்க காமெனி கையில் எடுத்த ஆயுதம்..! ஹைபர் சோனிக் Fattah-1 என்னும் ஏவுகணை அரக்கன்..!

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் தற்போது ஈரான் தனது முதல் ஹைபர் சோனிக் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்க கூடாது என்று இஸ்ரேலும், அதன் கூட்டாளியான அமெரிக்காவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. உடனே ஈரானின் அணு ஆய்வு கூடங்களை குறி வைத்து வெள்ளிக்கிழமை இஸ்ரேல் தாக்குதலை துவங்கியது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேலை தாக்கியதால் மிகப்பெரிய போர் வெடித்தது. இரு நாடுகளும் மாறி மாறி தீவிர தாக்குதலை நடத்தி வருகின்றன.

ஈரான் தாக்குதலில் இஸ்ரேல் மக்கள் 28 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். அதே நேரம் ஈரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இன்று இரு நாடுகளும் 6வது நாள் போரில் நுழைந்தன.

நேற்று வரை 10 ரவுண்ட் ஏவுகணை தாக்குதலை ஈரான் நடத்தி இருந்தது. ஒவ்வொரு ரவுண்டிலும் கொத்துக்கொத்தாக இஸ்ரேல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இதில் பலவற்றை இஸ்ரேல் இடைமறித்து விட்டது. இருப்பினும் சில ஏவுகணைகள் டெல்அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களை தாக்கின. இதில் தான் 30 பேர் வரை கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: Whatsapp-ஐ Uninstall பண்ணுங்க.. ஈரான் மக்களுக்கு அரசு திடீர் ஆர்டர்.. காரணம் இதுதான்!

இந்த நிலையில் தான் பாதாள குழியில் பதுங்கி இருக்கும் ஈரான் உச்ச தலைவர் கமெனி, இஸ்ரேலுக்கு வலுவான பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஈரான் ராணுவத்துக்கு உத்தரவிட்டார். இதை ஏற்று நள்ளிரவில் 11வது ரவுண்ட் ஏவுகணை அட்டாக்கை நடத்திய ஈரானின் புரட்சிகர ராணுவ படை, தங்களின் முக்கிய அஸ்திரத்தை கையில் எடுத்தது. அதிசக்தி வாய்ந்த Fattah-1 ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசியது. நள்ளிரவு 12:40 மணிக்கு 15 ஏவுகணைகள் மத்திய இஸ்ரேலை தாக்கின. அடுத்த 40 நிமிடங்கள் கழித்து மீண்டும் 5 ஏவுகணைகள் வந்தன.

Fattah-1 ரக ஏவுகணையை வைத்து இஸ்ரேலை பந்தாடி விட்டோம். இஸ்ரேலால் அவற்றை இடைமறிக்க முடியவில்லை. இஸ்ரேலின் வான் பரப்பு எங்களின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று ஈரானின் புரட்சிகர ராணுவ படை சொன்னது. Fattah-1 ரக ஏவுகணை மிகவும் சக்தி வாய்ந்தது. இது ஹைப்பர் சோனிக் வகையை சேர்ந்தது. அதாவது மின்னல் வேகத்தில் பறந்து சென்று எதிரி நாட்டை தாக்கும் சக்தி கொண்டது. ஹைபர் சோனிக் என்றால் ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு வேகத்தில் பயணிக்கும். அதாவது, மணிக்கு 6100 கிலோ மீட்டர் வரை சென்று எதிரி இலக்கில் மோதி தாக்கும்.

Fattah-1 ரக ஏவுகணைக்கு முக்கியமாக இன்னொரு சக்தி உண்டு. வளிமண்டல பரபரப்பில் மின்னல் வேகத்தில் பறந்து செல்லும் இந்த ஏவுகணை, எதிரி நாட்டு மீது இறங்கும் போது அசுர வேகம் காட்டும். அதிகபட்சமாக மணிக்கு 17,000 கிலோ மீட்டர் வேகம் வரை பறக்க கூடியது என்கின்றனர். அது மட்டும் அல்ல, கீழே இறங்கும் போது திசை மாற்றி மாற்றி சென்று இலக்கை தாக்க கூடியது. இதனால் இஸ்ரேலின் அயன்டோம், ஆரோ போன்ற சக்தி வாய்ந்த ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் Fattah-1 ரக ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது என்று ஈரான் சொல்கிறது.

இதனால் தான் Fattah-1 ஏவுகணைக்கு இஸ்ரேலை நொறுக்குபவன் என்று ஈரான் பெயர் சூட்டி இருக்கிறது. இவ்வளவு சக்தி வாய்ந்த ஏவுகணை என்றாலும் கூட, 11 ரவுண்டில் ஈரான் ஏவிய எல்லா Fattah-1 ரக ஏவுகணைகளையும் வானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறி இருக்கிறது. ஈரான் தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை. அதே நேரம் ஒரு ஏவுகணையை இடைமறித்த போது, அதில் சிதறிய துண்டுகள் கார் பார்க்கிங் ஏரியா மீது விழுந்தது. இதில் 20 கார்கள் சேதம் அடைந்தன என்று இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: சமரசமா? அதுக்கு இனி வாய்ப்பேயில்லை! போர் துவங்குவதாக ஈரான் தலைவர் காமெனி அறிவிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share