×
 

மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

அந்த முக்கிய கடல்வழிப் பாதையில் தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் செல்லும் கப்பல்களுக்கு பாதை மூடப்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் உள்ள லராக் தீவில் ஈரானின் ஏவுகணை ஏவுதளங்கள் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

லராக் தீவில் அமைந்திருந்த இரண்டு ஈரானிய ஏவுகணை ஏவுதளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதாக கூறப்படுகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் படைகள் கண்ணிவெடிகளை அமைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு எதிரான நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு பதிலடியாக ஜோர்டானில் உள்ள கிங் ஹுசைன் மற்றும் அல் அஸ்ராக் ஆகிய அமெரிக்க ராணுவ தளங்களை நோக்கி ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் 8 ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டதாக ஜோர்டானிய ராணுவம் தெரிவித்துள்ளது. தாக்குதலால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.

இதையும் படிங்க: பாரன் டிரம்ப் தலைக்கு ரூ.95 கோடி பரிசு!! டிரம்ப் குடும்பத்தை அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

லராக் தீவில் உள்ள தங்களது ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினால், அதற்கு மிகக் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கைக் குழுத் தலைவர் இப்ராஹிம் அஜிஜி, அமெரிக்காவின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு ஏற்ப பதில் நடவடிக்கைகள் இருக்கும் என எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாகவும் ஈரான் கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. அந்த முக்கிய கடல்வழிப் பாதையில் தங்களுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதாகவும், தங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படாமல் செல்லும் கப்பல்களுக்கு பாதை மூடப்பட்டுள்ளதாகவும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஏற்பட்டுள்ள இந்த புதிய பதற்றம் சர்வதேச சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கில் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றம் அடுத்தகட்டமாக எந்த அளவுக்கு செல்லும் என்பது குறித்து சர்வதேச நாடுகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

இதையும் படிங்க: என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share