×
 

UAE-ல் தாண்டவமாடும் ஈரான்!! அமீரகத்தில் விழுந்த 708 குண்டுகள்!! இரக்கம் காட்டாமல் ஈரான் தாக்குவதால் அதிர்ச்சி!

அபுதாபி, துபாய் சர்வதேச விமான நிலையங்கள், உலக புகழ் பெற்ற ஓட்டல்கள், குடியிருப்புகள் மீது ஈரான் குண்டு வீசி வருகிறது.

மத்திய கிழக்கில் (மேற்காசியா) அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டு தாக்குதல்களால் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் கோபத்தில் பதிலடி தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது. 

இஸ்ரேலுக்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது. இன்று இரண்டாவது நாளாக அபுதாபி, துபாய் உள்ளிட்ட நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள், உலக புகழ்பெற்ற ஓட்டல்கள், உயர்மட்ட குடியிருப்புகள் மீது ஈரான் குண்டு மழை பொழிந்து வருகிறது.

யுஏஇ அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 165 பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 2 க்ரூஸ் ஏவுகணைகள் யுஏஇ மீது வீசப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பேட்ரியாட், தாட் (THAAD) போன்ற அதிநவீன ஏவுகணை தடுப்பு அமைப்புகளால் வானிலேயே இடைமறித்து அழிக்கப்பட்டன. 

இதையும் படிங்க: தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!

சில ஏவுகணை துண்டுகள் சிதறி சிறு சேதத்தை ஏற்படுத்தின. மேலும் 541 டிரோன் குண்டுகளும் ஈரானால் அனுப்பப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை வானிலேயே அழிக்கப்பட்டன. சில டிரோன்கள் குடியிருப்புகள் மீது மோதி சேதத்தை ஏற்படுத்தின; சில கடலில் விழுந்தன.

இந்த தாக்குதல்களால் வெளிநாட்டினர் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் இந்தியர் ஒருவரும் உள்ளார். அவருக்கு பெரிய காயங்கள் இல்லை; நல்ல நிலையில் இருப்பதாக இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. யுஏஇயில் 35.5 லட்சம் இந்தியர்கள் வசிப்பதால், இந்த தகவல் இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை (CIA) எச்சரிக்கை விடுத்துள்ளது: ஈரான் தொடர்ந்து யுஏஇயில் உள்ள ஓட்டல்கள், சுற்றுலா தலங்கள், உயர்மட்ட கட்டிடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தலாம். இதனால் துபாய், அபுதாபி நகரங்கள் முழுமையாக பதற்றத்தில் உள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டு, சர்வதேச போக்குவரத்து முடங்கியுள்ளது. ஏர் இந்தியா உள்ளிட்ட விமான நிறுவனங்கள் யுஏஇ சேவைகளை ரத்து செய்துள்ளன.

இந்த தாக்குதல்கள் சவுதி அரேபியா, கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளிலும் தொடர்கின்றன. ஈரான் தனது பதிலடியை தீவிரப்படுத்தி வருவதால், பிராந்தியம் முழுவதும் அச்சம் நிலவுகிறது.

எண்ணெய் விலை உயர்வு, உலக பொருளாதார பாதிப்பு போன்றவை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியா ஏற்கனவே இந்தியர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, அவசர உதவி எண்களை வெளியிட்டுள்ளது. போர் நிறுத்தம் விரைவில் ஏற்பட வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க: யுஏஇ, சவுதி, இஸ்ரேல், கத்தார் நாடுகளுக்கான விமான சேவை ரத்து! கைவிரித்தது ஏர் இந்தியா!! மக்கள் தப்பிக்க வழி இருக்கா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share