×
 

ஈரான் உளவுத்துறை அமைச்சர் பலி! இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப் (Esmaeil Khatib) இஸ்ரேலியப் படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நேற்று இரவு (மார்ச் 17) டெஹ்ரானில் உள்ள ஈரானின் உளவுத்துறை அமைச்சகத்தைக் குறிவைத்து இஸ்ரேலியப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் இஸ்மாயில் கதிப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) உறுதிப்படுத்தியுள்ளார்.

 கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கொல்லப்படும் மூன்றாவது உயர்மட்ட அதிகாரி இவர் ஆவார். ஏற்கனவே நேற்று ஈரானின் தேசிய பாதுகாப்புச் செயலாளர் அலி லாரிஜானி மற்றும் பசிஜ் (Basij) படைப்பிரிவுத் தலைவர் குலாம்ரெசா சொலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது.

இதையும் படிங்க: இஸ்ரேல் அதிரடி தாக்குதல்! ஈரானின் பாசிஜ் படை தளபதி சுலைமானி கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

ஈரானில் யாருக்கும் பாதுகாப்பு கிடையாது; அனைவரும் இலக்குகளே என்று தெரிவித்த இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், "இன்று நாள் முழுவதும் இன்னும் பல அதிரடி ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன என எச்சரித்துள்ளார். இஸ்மாயில் கதிப் படுகொலை குறித்து ஈரான் அரசு இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தலையோ அல்லது மறுப்பையோ தெரிவிக்கவில்லை. இருப்பினும், அலி லாரிஜானியின் கொலைக்குப் பழிவாங்கப்படும் என ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) ஏற்கனவே அறிவித்துள்ளது.

2021-ஆம் ஆண்டு முதல் ஈரானின் உளவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி வந்த இவர், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். ஈரானுக்குள் நடக்கும் உள்நாட்டுப் போராட்டங்களை ஒடுக்குவதிலும், வெளிநாடுகளில் உளவு வேலைகளை ஒருங்கிணைப்பதிலும் இவர் முக்கியப் பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: எரிவாயு தட்டுப்பாட்டிற்கு விடிவுகாலம்! ஹார்முஸ் நீரிணையை தாண்டி குஜராத் வந்தது 'சிவாலிக்' கப்பல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share