கருவிலேயே சிதைந்த ஈரானின் கனவு.. இஸ்ரேல் கொடுத்த மரண அடி.. போரில் இதுவரை வெளிவராத பகீர் சம்பவம்..!
இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில், அன்டர் கிரவுன்ட் அணு ஆய்வு கட்டமைப்புகளையும் இஸ்ரேல் தகர்த்து இருப்பது இப்போது உறுதியாகி உள்ளது.
ஈரானிடம் இப்போது அணு ஆயுதம் கிடையாது. ஆனால் அதை தயாரிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அணு ஆயுதம் தயாரிக்க வேண்டும் என்றால் உயர் தர அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தேவை. இந்த யுரேனியத்தை செறிவூட்டும் வேலையை ஈரான் தீவிரமாக செய்து வந்தது. கிட்டத்தட்ட அணு ஆயுதம் தயாரிக்க தேவையான அளவு யுரேனியத்தை செறிவூட்டியதாக பல உளவு அமைப்புகள் தெரிவித்தன. சர்வதேச அணு சக்தி முகமையும் இது பற்றி தொடர்ச்சியாக எச்சரித்து வந்தது.
ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பது நல்லதல்ல. அந்த நாடு அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இது தொடர்பாக ஈரானுடன் அமெரிக்கா நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இது தான் சந்தர்ப்பம் என்று காத்திருந்த இஸ்ரேல், ஈரான் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்த துவங்கியது. அதன் பிறகு தான் பெரிய போர் வெடித்தது.
இஸ்ரேல் நடத்திய முதல் நாள் தாக்குதல் ஈரானின் அடிமடியிலேயே கைவைத்த தகவல் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, ஈரானின் அணு சக்தி மையங்கள், ஆய்வு கூடங்கள், யுரேனியம் செறிவூட்டும் மையங்களை குறி வைத்து இஸ்ரேலின் 200 போர் விமானங்கள் அன்று தாக்குதல் நடத்தின. இதில் ஈரானின் முக்கியமான 9 அணு ஆய்வு விஞ்ஞானிகளை குண்டு வீசி கொன்றன. அணு ஆய்வு கூடங்கள் தகர்க்கப்பட்டன. குறிப்பாக, ஈரானின் பிரதான அணு ஆய்வு கூடமான நடான்ஸ் ஆய்வு கூடத்தை இஸ்ரேல் போர் விமானங்கள் துல்லியமாக தாக்கின.
இதையும் படிங்க: ட்ரம்புடன் பாக்., ராணுவ தளபதி ரகசிய சந்திப்பு..! இந்தியாவுக்கு எதிராக சதியா? ஈரானுக்கு வைக்கபோகும் ஆப்பா?
அங்கு தான் யுரேனியம் செறிவூட்டும் முக்கியமான வேலையை ஈரான் செய்து வந்தது. தரைக்கு மேல் கட்டுமானங்கள் நிறைய இருந்தன. அன்டர் கிரவுன்ட்டிலும் அணு ஆய்வு வசதிகள் உண்டு. பூமிக்கு மேற்பரப்பில் இருந்த கட்டுமானங்களை இஸ்ரேல் தகர்த்து விட்டது. இதை சர்வதேச அணு சக்தி முகமை உறுதி செய்தது. அதே நேரம் அன்டர் கிரவுன்டில் இருந்த ஆராய்ச்சி கூடங்களை இஸ்ரேல் தாக்கவில்லை என்று முதலில் தகவல் வெளியானது.
இஸ்ரேலால் ஒருபோதும் அந்த அன்டர் கிரவுன்ட் ஆராய்ச்சி கூடத்தை தாக்க முடியாது என்று ஈரான் சொல்லி வந்தது. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் பலரும் கூட அதேயே சொல்லி வந்தனர். அங்கு தான் யுரேனியம் செறிவூட்டும் முக்கிய வேலையையும் ஈரான் செய்து வந்தது. ஆனால் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சில், அன்டர் கிரவுன்ட் அணு ஆய்வு கட்டமைப்புகளையும் இஸ்ரேல் தகர்த்து இருப்பது இப்போது உறுதியாகி விட்டது.
இதை சர்வதேச அணு சக்தி முகமையே உறுதி செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல் நாள் கிடைத்த ரிப்போர்ட் மற்றும் ஆய்வுகளை பார்த்த போது, நடான்ஸ் அணு சக்தி கூடத்தின் மேற்பரப்பை மட்டுமே இஸ்ரேல் தகர்த்தது என்று நினைத்தோம். ஆனால் இஸ்ரேலால் தாக்கவே முடியாது என்று கருதப்பட்ட அன்டர் கிரவுன்ட் ஆய்வு கூடத்திலும் போர் விமானங்கள் குண்டு வீசி இருப்பதை இப்போது உறுதி செய்திருக்கிறோம்.
ஈரானில் இருந்து கிடைத்த ரிப்போர்ட் மற்றும் சாட்டிலைட் புகைப்படங்களை பகுப்பாய்வு செய்த போது ஈரானின் அன்டர் கிரவுன்ட் அணு சக்தி கூடமும் அடிவாங்கி இருப்பது உறுதியாகி விட்டது. அதே நேரம், இஸ்ஃபஹான், ஃபோர்டோவில் உள்ள அணு ஆய்வு கூடங்களை இஸ்ரேல் தாக்கவில்லை. அங்கு இதுவரை எந்த தாக்குதலும் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என்று சர்வதேச அணு சக்தி முகமை கூறி இருக்கிறது.
இதையும் படிங்க: போர் நிறுத்தமா? இது அதுக்கும் மேல! ஈரானின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போடும் ட்ரம்ப்..!