×
 

இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பெரும்பாலான மக்களை பாதுகாப்பாக வெளியேறும்படியும், இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோலவே, காசா மற்றும் லெபனானிலும் தாக்குதல்களை நடத்தப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது.

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருப்பதாக கூறி, அந்த நாட்டின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ளது. தங்கள் நாட்டை பரம எதிரியாக கருதும் ஈரான், அணுகுண்டு தயாரித்து விட்டால், அது தங்களுக்கு பேராபத்தாக முடிந்துவிடும் என்ற எண்ணத்தில் இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்துகிறது. பதிலுக்கு ஈரானும், இஸ்ரேல் மீது ஏவுகணை வீசி தாக்குதலில் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ஈரானிடம் இருக்கும் யுரேனியம், எத்தனை நாட்களில் அந்த நாடு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஈரானின் அணுசக்தி திட்டத்தை தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வரும் சர்வதேச அணுசக்தி முகமை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஈரான் இடம் தற்போதுள்ள மேம்படுத்தப்பட்ட யுரேனியத்தை கொண்டு இரண்டரை நாட்களில் ஒரு அணுகுண்டு தயார் செய்துவிட முடியும். 11 நாட்களில் ஐந்து அணுகுண்டுகளை தயாரித்து விடலாம். ஒரு மாத கால அவகாசத்தில் 11 அணுகுண்டுகளை ஈரான் தயார் செய்து விட முடியும். மூன்று மாத காலத்தில் 19 அணுகுண்டுகளையும், ஐந்து மாத காலத்தில் 22 அணுகுண்டுகளையும் அந்த நாடு தயார் செய்து விட முடியும். இந்த நிலையில் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஈரான் தயாராவது, தனக்கு விடப்பட்டுள்ள நேரடி எச்சரிக்கை என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

இதையும் படிங்க: ஈரான் தான் பிரச்னைக்கு காரணம்.. இஸ்ரேலுக்கு ஆதரவாக ஜி7 மாநாட்டில் தீர்மானம்..!

அணுசக்தி தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே சமீபத்தில் நடந்த பேச்சு தோல்வி அடைந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 13ல் ஈரானில் மிகப் பெரிய தாக்குதலை இஸ்ரேல் நடத்தியது. இதற்கு ஈரானும் பதிலடி கொடுத்தது. இரு நாடுகளும் பரஸ்பரம், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் வாயிலாக தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன.

இரு நாடுகளுக்கும் இடையே, 1,500 கி.மீ., துார இடைவெளியும், நடுவில் சில நாடுகளும் உள்ள போதிலும், இந்த தாக்குதல்கள் தீவிரமடைந்தன. ஈரானின் அணுசக்தி வளாகங்களையும், அணுசக்தி செறிவூட்டும் மையங்களையும் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானுக்குள் இஸ்ரேலும் ஏவுகணை, ட்ரோன் தாக்குதலை நடத்தியது. ஈரான் அனுப்பிய, 120 ஏவுகணைகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் கூறியுள்ளது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள பெரும்பாலான மக்களை பாதுகாப்பாக வெளியேறும்படியும், இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுபோலவே, காசா மற்றும் லெபனானிலும் தாக்குதல்களை நடத்தப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இதுவரை நடந்துள்ள தாக்குதல்களில், 224 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் தரப்பு கூறுகிறது. ஆனால், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, நிவாரண அமைப்புகள் கூறுகின்றன.

ஈரான் நடத்திய தாக்குதல்களில், 24 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500 பேர் காயமடைந்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும், 370 ஏவுகணைகள், 100க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்துள்ளதாகவும், இஸ்ரேல் கூறுகிறது.

இதையும் படிங்க: டெஹ்ரானுக்கு வைக்கப்படும் குறி.. இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற ஈரான் புதிய திட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share