×
 

காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!

ஈரான் ஆட்சியாளர் கமேனியை கொல்வதே இந்த போரின் இலக்கு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் கூறியுள்ளார்

ஈரான் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களை துரித கதியில் முன்னெடுத்து வருகிறது. இதனால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய இஸ்ரேல், ஆபரேஷன் ரைசிங் லயன் (எழுச்சி பெறும் சிங்கம்) என்ற பெயரில் ஈரான் மீது கடந்த வாரம் தாக்குதல் தொடுத்தது. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது.

ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3" என்ற பெயரில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது. 

இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, “கமேனியை கொல்வது ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையை அதிகப்படுத்தாது. மாறாக முடிவுக்கு கொண்டு வரும்” என்று பேசியிருந்தார்.

இதையும் படிங்க: கொத்து கொத்தாய் வெடிக்கும் கிளஸ்டர் ஏவுகணை..! இஸ்ரேலை சூறையாட ஈரான் எடுத்த அதிரடி முடிவு..!

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில், ‘ஈரானின் உச்ச தலைவர் என்று அழைக்கப்படுபவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியும். 

அவர் எங்களுக்கு ஒரு எளிதான இலக்கு. ஆனால் அங்கு பாதுகாப்பாக இருக்கிறார். நாங்கள் அவரை இப்போதைக்கு கொல்லப் போவதில்லை. ஆனால் பொதுமக்கள் அல்லது அமெரிக்க வீரர்கள் மீது ஏவுகணைகள் வீசப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எங்கள் பொறுமை குறைந்து வருகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே,  ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனிக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் சவால் ஒன்றை விடுத்துள்ளார். அதில், "ஈரானின் அண்டை நாட்டைச் சேர்ந்த சர்வாதிகாரி ஒருவர் (ஈராக்கை சேர்ந்த சதாம் உசேன்), இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால், அவருக்கு நேர்ந்த கதியை எண்ணிப் பாருங்கள்" என இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: கமேனி போன்ற சர்வாதிகாரிகள், ஈரான் போன்ற நாட்டை வழிநடத்தும்போது, இஸ்ரேலை அழித்துவிடுவார்கள். அவரை இருக்க விடக்கூடாது. இது குறித்து இஸ்ரேல் விமானப்படைக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தனது இலக்கு என்ன என்பதை அறிந்து வைத்துள்ளது. அந்த நபர் இருக்கக்கூடாது. கமேனி தனது ஏஜென்ட்கள் மூலம் இஸ்ரேலை அழித்துவிடுவார். நம்மை அழிக்க நினைக்கும் அந்த நபர் வாழக்கூடாது. அவரை தடுத்து நிறுத்துவது, கொல்வது என்பது இந்த போரின் ஒரு பகுதியாகும். இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த வாரம் ஈரான் மீதான தாக்குதலை துவக்கிய இஸ்ரேல், ஆட்சி மாற்றமே இலக்கு எனக்கூறியிருந்தது. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ கூறுகையில், ராணுவ நடவடிக்கை, ஈரானியர்கள் சுதந்திரம் பெறுவதற்கான வழியை ஏற்படுத்தும் எனக்கூறியிருந்தார். இதனிடையே, ஈரானின் மதத் தலைவர் கமேனியை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டதாகவும், ஆனால் டிரம்ப் தடுத்து நிறுத்தியதாக அமெரிக்கா தெரிவித்து இருந்தது.

இதையும் படிங்க: ஈரான் மீது ராணுவ தாக்குதலா? 2 வாரத்தில் முடிவு செய்வார் ட்ரம்ப்.. வெள்ளை மாளிகை தந்த அதிர்ச்சி ரிப்போர்ட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share