×
 

ஈரானின் அணுசக்தி தளங்களை துல்லியமாக தாக்கிய அமெரிக்கா.. ஈரானுக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் அமெரிக்கா தனது தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கி தாக்குதலை தொடங்கியுள்ளது. தாக்குதல் குறித்து இரண்டு வாரங்களின் முடிவெடுக்கப்படும் என அதிபற்றம் கூறிய நிலையில் ஈரான் மீது திடீர் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் எச்சரிக்கையும் மீறி ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் மூன்று அணு சக்தி தளங்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதற்காக விமானப்படை வீரர்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இஸ்ரேல்- ஈரான் நாடுகளுக்கு இடையிலான போரில் அமெரிக்கா களமிறங்கியதால் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: ஈரான் நிபந்தனை இன்றி சரணடைய வேண்டும்...! உச்ச தலைவருக்கு குறி? டிரம்ப் எச்சரிக்கை!

இதற்கிடையில் இஸ்ரேலுடன் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் செங்கடலில் அமெரிக்க கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.  இனிமேலாவது இஸ்ரேலுக்கு எதிரான போரை முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்ரேல் - ஈரான் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும் எனவும் இல்லாவிடில் பெரிய தாக்குதலை ஈரான் எதிர்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகிலேயே பயங்கரவாதத்திற்கு அதிக அளவு ஆதரவு தரும் நாடு ஈரான் தான் எனவும் அமைதிக்கு திரும்பாவிட்டால் மீதமுள்ள இலக்குகளையும் தாக்குவோம் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இதனிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் அதிரடி நடவடிக்கை வரலாற்றை மாற்றி எழுதும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலை குறிப்பிட்டு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டு தெரிவித்துள்ளார். 

ஆனால், பொய் சொல்வது அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்பின் வாடிக்கையான ஒன்று என ஈரான் அரசு தொலைக்காட்சி விளக்கம் அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தாக்கியதாக கூறும் அணுசக்தி தலங்கள் முன்னரே அங்கிருந்து காலி செய்யப்பட்டு விட்டதாக கூறியுள்ளது. அமெரிக்காவின் குண்டு வீச்சு குறித்த சேதங்களை இனிமேல்தான் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று ஈரான் அரசு தொலைக்காட்சி மூலம் விளக்கம் அளித்துள்ளது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்களை தாக்கி அழித்ததாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்த நிலையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது  மேலும், குண்டு வீச்சுகள் மூலமாக ஈரானின் அணுசக்தி நிலையங்களை அழித்துவிட முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

இதனிடையே, போர் பதற்றம் காரணமாக, ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கை மூலமாக ஈரானிலிருந்து மேலும் 290 இந்தியர்கள் தாயகம் வந்தடைந்தனர். ஆப்ரேஷன் சிந்து நடவடிக்கையில் ஆறு சிறப்பு விமானங்கள் மூலம் இதுவரை 1,117 இந்தியர்கள் தாயகம் வந்துள்ளனர். 

இதையும் படிங்க: ஈரான் தலைவரை கொல்லுறது தான் ஒரே தீர்வு.. இஸ்ரேல் பிரதமர் பேச்சால் உச்சகட்ட பதற்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share