×
 

கரூர் துயரத்திற்கு நீதி கிடைக்காது... சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து மேல்முறையீடு...!

கரூர் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ ஜி அஸ்ரா காருக்கு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணை தொடங்கிய சில நாட்களிலேயே, த.வெ.கவின் தலைமை நிர்வாகிகள் என். ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல்குமார் ஆகியோர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணை அரசியல் ரீதியாகத் தங்களை இலக்காக்கும் வகையில் நடத்தப்படுவதாகக் கூறி, முதலில் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களில், விசாரணை போலீஸ் துறையால் நடத்தப்படுவதால், அது நடுநிலையற்றதாக இருக்கும் என வாதிடப்பட்டது. உயர் நீதிமன்றம் இந்த மனுக்களை நிராகரித்ததும், இருவரும் உடனடியாக உச்ச நீதிமன்றத்தை நாடினர்.

இந்த நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக ஜி.எஸ். மணி என்ற வழக்கறிஞர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேலும் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூரில் 41 பேர் உயிர்களை பலி கொண்ட துயரக் சம்பவம் நடைபெற முழுக்க முழுக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும், காவல்துறையையும் காரணம் என கூறப்பட்டுள்ளது. பிரச்சாரத்திற்கு சரியான இடத்தை தேர்வு செய்யாதது மற்றும் சரியான இடத்திற்கு போலிஸ் அனுமதி அளிக்காதது துயரத்துக்கு காரணம் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. பலியானவர்கள் குடும்பத்திற்கு அரசு சார்பில் 50 லட்ச ரூபாயும், விஜய் சார்பில் தலா ஒரு கோடி ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என முறையிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #karurstampede: நான் இருக்கேன்... கவலைப்படாதீங்க! ஆறுதல் கூறி நிதியுதவி அளித்த செந்தில் பாலாஜி...!

கரூர் விவகாரத்தை தனிநபர் ஆணையம், உள்ளூர் போலீசாரோ அல்லது ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழுவோ விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிரிமினல் விசாரணை என்பது அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை என்றும் அதன் அடிப்படையில் விசாரணை தேவை எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: கரூர் துயரச் சம்பவம்: நிர்வாக அலட்சியமே முழு காரணம்.. பாஜக எம்.பி.க்கள் குழு அறிக்கை?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share