பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!
பாகிஸ்தான் எந்த மொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் நாங்களும் பேசுவோம் என அமெரிக்காவில் எம்.பி சசிதரூர் தெரிவித்தார். பயங்கவராதத்திற்கு எதிரான நம் நிலைப்பாட்டையும், நடவடிக்கையையும் விளக்கினர்.
பாக்., ஆதரவு பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் நடவடிக்கை குறித்து உலக நாடுகளிடம் விளக்கம் அளிப்பதற்காக நம் நாட்டின் அனைத்து கட்சி எம்பிக்கள் குழு 33 நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் எம்பி சசி தரூர் தலைமையிலான குழுவினர், அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு எம்பிக்களை சந்தித்து பயங்கவராதத்திற்கு எதிரான நம் நிலைப்பாட்டையும், நடவடிக்கையையும் விளக்கினர்.
நம் எம்பிக்களின் விளக்கத்தை ஏற்ற அமெரிக்க எம்பிக்கள் கூறியதாவது: இந்தியாவும், அமெரிக்காவும் உலகின் மிகப் பெரிய, வரலாற்று சிறப்பு மிக்க ஜனநாயக நாடுகள். இரு நாடுகள் இடையிலான நட்பு மிக வலிமையானது.
இதையும் படிங்க: வெறும் 8 மணி நேரம் தான்.. ஆட்டம் க்ளோஸ்.. பாக்., போன் பண்ணி கெஞ்சியதாக அனில் சவுகான் விளக்கம்..!
இது ஒரு மிக முக்கியமான சந்திப்பு. எங்கள் நட்பு நாட்டிலிருந்து வந்துள்ள பிரதிநிகளை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். பயங்கரவாதத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்க முடியாது. உங்களை அடித்தால் திருப்பி அடிக்கத் தான் செய்ய வேண்டும். அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள்.
பயங்கரவாதத்தை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். இந்த உலகில் பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் எந்த இடமும் கிடையாது. அதை ஒழிப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயலாற்ற வேண்டும் என நினைக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கும் இந்தியாவுடன் அமெரிக்காக துணை நிற்கும் என்றனர். தொடர்ந்து, அங்குள்ள எம்பிக்கள், செய்தியாளர்கள், இந்தியர்கள் மத்தியில் நம் எம்பிக்கள் குழு தலைவர் சசி தரூர் பேசியதாவது:
பாகிஸ்தான் பயங்கராதத்தை தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளது. பஹல்காம் தாக்குதலின் போதும் நாங்கள் அதைத் தான் கூறினோம். பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் படி கூறினோம். அவர்கள் கேட்கவில்லை. நாங்கள் அதை செய்து முடித்தோம்.
நான் ஏற்கனவே கூறியது போலத்தான். அவர்கள் எந்த மொழியில் பேசுகிறார்களோ அதே மொழியில் நாங்களும் பேசுவோம். எங்கள் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு அழைத்தால், அது எந்த வகையிலும் சாத்தியம் இல்லை.
வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியர்களின் பலம். இங்கு வந்துள்ள எம்பிக்கள் ஐந்து வெவ்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏழு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இங்கு இந்நாள், முன்னாள் துாதரக அதிகாரிகள் எங்களுடன் உள்ளனர். மூன்று வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் இங்கு ஒன்று கூடியுள்ளோம். இத்தனை வேற்றுமை இருந்தாலும் நாங்கள் அனைவரும் இந்தியர்களாக இங்கு ஒன்று கூடியுள்ளோம். மதத்தின் அடிப்படையிலோ, மாநிலத்தின் அடிப்படையிலோ எங்களை பிரிக்க முடியாது.
பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், அவர்களின் மதத்தை கேட்டு கேட்டு சுட்டனர். தன் கண் முன்னே கணவரை இழந்த பெண்ணிடம் இதைப் போய் உங்கள் பிரதமரிடம் சொல் என்றனர். நான் இப்போதும் ஒன்று சொல்கிறேன். பயங்கரவாதிகளின் பிரிவினைவாத எண்ணம் இந்தியர்களிடம் எடுபடாது.
இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, பயங்கரவாதத்திற்கு எதிராக குரல் கொடுக்கிறோம். எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறவும், பயங்கரவாதத்திற்கு எதிரான எங்கள் நிலைப்பாடு, நடவடிக்கையை விளக்கவும் இங்கு வந்துள்ளோம். எங்களை புரிந்து கொண்டு ஆதரவளித்த அனைவருக்கம் நன்றி என்றார்
இதையும் படிங்க: சொல்லாததையும் செய்து காட்டிய இந்தியா.. அழுது புலம்பிய பாகிஸ்தானால் வெளிவந்த உண்மை..!