×
 

லெபனான் மக்களை ஆதரிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும்! இஸ்ரேல் பிரதமருக்கு பிரான்ஸ் அதிபர் மெசேஜ்!

லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தவிர்க்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை வலியுறுத்தியதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தவிர்க்குமாறு வலியுறுத்தியுள்ளார். லெபனானில் தொடரும் பதற்றம் மற்றும் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா மோதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயத்தை எச்சரித்துள்ளார்.

மேக்ரான் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: லெபனானின் நிலைமை குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுன் மற்றும் பிரதமர் நவாப் சலாம் ஆகியோருடன் தான் பேசியதாக தெரிவித்தார். 

லெபனானில் நடைபெறும் தாக்குதல்கள் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளன. இஸ்ரேல் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினேன். தாக்குதலை தீவிரப்படுத்தினால் முழு பிராந்தியமும் ஆபத்தில் ஆழ்ந்துவிடும். லெபனானின் பிராந்திய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், தரைவழி ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்கவும் இஸ்ரேல் பிரதமரை வலியுறுத்தினேன்.

இதையும் படிங்க: லெபானானுக்கு குறி வைக்கும் இஸ்ரேல்! கூடுதல் இடங்களை கைப்பற்ற நெதன்யாகு ஆர்டர்!!

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது அவசியம் என்றும், லெபனான் ஆயுதப் படைகள் தங்கள் இறையாண்மைப் பணிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்க பிரான்ஸ் தனது நட்பு நாடுகளுடன் இணைந்து முயற்சிகளை ஆதரிக்கும். தெற்கு லெபனானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான அவசரநிலைக்கு பதிலளிக்கும் வகையில், இடம்பெயர்ந்த லெபனான் மக்களுக்கு உடனடி உதவி செய்ய பிரான்ஸ் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.

இஸ்ரேல் - ஈரான் போர் தொடங்கிய பிறகு ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனானின் தெற்கு பகுதிகளில் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் தரைப்படைகள் லெபனான் எல்லைக்குள் நுழைந்து சில இடங்களை கைப்பற்றியுள்ளன. 

இது முழு அளவிலான தரைவழித் தாக்குதலாக மாறாமல் இருக்க வேண்டும் என மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே 2024 இல் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும், ஹிஸ்புல்லா தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தப் பிராந்தியத்தில் போர் விரிவடைவதால் உலக நாடுகள் கவலை அடைந்துள்ளன. பிரான்ஸ் லெபனானுக்கு மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கவும், லெபனான் ராணுவத்தை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. மேக்ரானின் இந்த அறிக்கை, இஸ்ரேல் - லெபனான் எல்லைப் பதற்றத்தை குறைக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. 

இதையும் படிங்க: லெபானானுக்கு குறி வைக்கும் இஸ்ரேல்! கூடுதல் இடங்களை கைப்பற்ற நெதன்யாகு ஆர்டர்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share