×
 

முக்கிய அணுசக்தி மையத்தை பந்தாடிய இஸ்ரேல்.. இழப்பை ஈடுகட்ட ஈரானுக்கு பல மாதங்கள் ஆகுமாம்..!

இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழி தாக்குதல்களால் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது.

இஸ்ரேல், ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றி இருக்கிறது. நேற்று முன்தினம்  அதிகாலையில் திடீரென ஈரான் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது. ஈரானின் அணு உற்பத்தி மையங்கள் மற்றும் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன.அணு ஆயுதம் தயாரிப்பதற்கான ஏற்பாட்டில் தீவிரமாக ஈடுபட்டு வந்த ஈரான், தனது அணு உற்பத்தி கூடங்களின் முக்கிய கட்டமைப்புகளை இழந்தது.

அதே போல் ராணுவ தளங்களிலும் மிகப்பெரிய சேதம். கொத்து கொத்தாக வீரர்கள் கொல்லப்பட்டனர். எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் உச்ச தலைவர் கமெனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும், ஈரானின் அனைத்து வடிவிலான ராணுவத்தின் தலைமை தளபதி முகமது ஹூசைனை இந்த தாக்குதலில் இஸ்ரேல் கொன்று விட்டது. இது தவிர இரண்டு முக்கிய படை பிரிவின் தலைமை தளபதிகளும், 2 முக்கிய அணு விஞ்ஞானிகளும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

இதையும் படிங்க: இந்தியா -பாக்., போல ஈரான் - இஸ்ரேல் போரை நிறுத்துவேன்.. ஆட்டத்தை ஆரம்பிக்கும் ட்ரம்ப்..!

எப்படியாவது ஈரானின் மொத்த அணு ஆயுத திட்டங்களையும் தகர்க்க வேண்டும் என்பது இஸ்ரேலின் பல ஆண்டு கனவு. ஆனால் அமெரிக்காவிடம் இருந்து க்ரீன் சிக்னல் வராமல் இருந்தது. ஈரானுடனான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததும், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. தாக்குதல் நடந்ததும் அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, தங்களுக்கு இதில் தொடர்பில்லை என்று ஒதுங்கி கொண்டது.

இது முழுக்க முழுக்க இஸ்ரேலின் முடிவு. தங்கள் மக்களை காக்க சுயமாக அந்த நாடு முடிவெடுத்து தாக்கதல் நடத்தி இருக்கிறது என்று அமெரிக்கா சொல்லி இருந்தது. இதை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. 100க்கும் அதிகமான ட்ரோன்களை ஏவி விட்டது. அதை இஸ்ரேல் முறியடித்தது. அடுத்த கட்டமாக மிகப்பெரிய தாக்குதல் நடத்த ஈரான் திட்டமிட்டு வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் உள்ள முக்கிய அணுசக்தி மையம் சேதமடைந்துள்ளதை சர்வதேச அணுசக்தி முகமை உறுதி செய்துள்ளது. தெற்கு டெஹ்ரானில் இருந்து 400 கி.மீ., தொலைவில் உள்ள இஸ்பஹான் யுரேனியம் மாற்று ஆலை பயங்கர சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் பல மாதங்கள் தாமதப்படுத்தப்படலாம் என்று எச்சரித்துள்ளது. அதேவேளையில், 1,640 அடி ஆழத்தில் மலைக்குள் அமைந்துள்ள போர்டோ அணுசக்தி மையம் இஸ்ரேலின் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளது.


இந்த சூழலில், வியன்னாவில் சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவச ஆலோசனைக் கூட்டம் இன்று கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் மற்றும் யுரேனியத்தின் இருப்பு குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட இருக்கிறது.

இதையும் படிங்க: ஹலோ புதின்.. இத கவனிச்சீங்களா? இஸ்ரேல் - ஈரான் போர் குறித்து போனில் பற்றவைத்த ட்ரம்ப்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share