பாகிஸ்தான் ராணுவப் படையை ஓட ஓட விரட்டியடித்த பலூச் படை... அதிர்ச்சி வீடியோ..!
பாகிஸ்தான் ராணுவத்தினர் பலூச் படையினரைக் கண்டதும் அவசரத்திலும், உயிர் பயத்திலும் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.
சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவத்தை உள்நாட்டை சேர்ந்த பலூசிஸ்தான் போராளிகள் கருவறுத்து வருகின்றனர். அங்கு மோதல்கள் ஆழமாக வேரூன்றி வருகிறது. பலூசிஸ்தான்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் அரசு தங்களை ஓரங்கட்டுவதாகவும், பொருளாதார ரீதியாக சுரண்டிருவதாகவும், மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி தனி நாடு கேட்டு வருகின்றன.
பலூச் பகுதியில் ஏராளமான இயற்கை வளங்கள் இருந்தபோதிலும், உள்ளூர் மக்கள் தொடர்ந்து வறுமை, வளர்ச்சியின்மை, அரசியல் விலக்கு ஆகியவற்றை எதிர்கொள்கின்றன. இந்தப் பகுதியின் நன்மைகள் மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு, குறிப்பாக சீனாவிற்கு வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
பலூசிஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் இராணுவத்தின் அதிக எண்ணிக்கையிலான நிலைநிறுத்தம் பல உள்ளூர் மக்களால் ஒரு பாதுகாப்பு சக்தியாக இல்லாமல், ஒரு அடக்குமுறை இருப்பு, வெறுப்பைத் தூண்டி வன்முறைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. பலூச் தேசியவாத விரும்பங்களுக்கும், பாகிஸ்தானின் கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாடு அப்பகுதியில் உறுதியற்ற தன்மைக்கு ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.
இதையும் படிங்க: இந்தியா - பாக். பதற்றம்; இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்.. டிவி சேனல்களுக்கு அதிரடி உத்தரவு!!
மார்ச் மாதத்தில் இதேபோன்ற ஒரு பெரும் சம்பவத்தில், பலுசிஸ்தானின் கச்சி மாவட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ரயிலை பலூச் படையினர் கடத்தினர். அதில் இருந்த 300க்கும் மேற்பட்ட பாகிஸ்தானின் ராணுவ வீரர்களை கொன்றனர். பலூச் படையினர் பெரும்பாலும் பஞ்சாப், பிற மாகாணங்களைச் சேர்ந்த பணியாளர்களை குறிவைத்து, அவர்கள் பலூச் நிலங்களை ஆக்கிரமித்ததாகக் கூறி அவர்கள் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
பலுசிஸ்தான் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாணங்கள் நாட்டில் மிகவும் கொந்தளிப்பானவையாகத் தொடர்கின்றன. இராணுவம், துணை ராணுவப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்திய ராணுவம் பாகிஸ்தானின் அத்துமீறலை தடுத்து பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தை நாள்தோறும் கடுமையாக தாக்கி வருகிறது பலூச் விடுதலைப்படை. இந்நிலையில் வெளியாகி உள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதுந்த வீடியோவில் மக்கள் பரபரப்பாக கூடியுள்ள இடத்தில் பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் வாகன அணிவகுப்பு நகர்ந்து செல்கிறது.
அங்கு ஆயுதங்களுடன் கூடிய பலூச் போராட்டக் குழுவினர் பாகிஸ்தான் ராணுவத்தினரின் வாகனங்களை துரத்தி துரத்தி விரட்டுகின்றனர். ஆனால், அங்கிருந்த பொதுமக்களை அவர்கள் தாக்கவில்லை. பாகிஸ்தான் ராணுவத்தினர் பலூச் படையினரைக் கண்டதும் அவசரத்திலும், உயிர் பயத்திலும் அங்கிருந்து தப்பி ஓடுகின்றனர்.
Live Visuals 🚨 from Balochistan
— Richard Kettleborough (@RichKettle07) May 9, 2025
~ Pakistani 🇵🇰 Soldiers ran away after seeing Balochistan Liberation Army (BLA) 😲
~ What's your take on this 🤔 #IndiaPakistanWar pic.twitter.com/7VCqQjwYGY
சர்வதேச கண்டனங்கள், இராணுவம் அவ்வப்போது பதிலடி கொடுத்து வந்தபோதிலும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான பலூச் விடுதலை போராளிகளின் இன-தேசியவாத போராட்டம் அந்தப் பகுதியை தொடர்ந்து சீர்குலைத்து வருகிறது.
இதையும் படிங்க: அடிபட்ட பாம்பாய் சீரும் பாகிஸ்தான்... இந்தியாவுக்குள் நிகழ்த்தத் துடிக்கும் படுபாதகச் செயல்..!