Knesset medal பெறும் முதல் இந்திய பிரதமர்!! இஸ்ரேலில் அடுத்தடுத்து சாதனை படைக்கும் மோடி!
இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய இந்த பதக்கத்தை பெறும் முதலாவது இந்திய பிரதமர் மோடி ஆவார். அதைப்போல இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமரும் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் அரசு முறை பயணமாக நேற்று (பிப்ரவரி 25, 2026) இஸ்ரேலுக்கு சென்றார். டெல்லியிலிருந்து காலை தனி விமானத்தில் புறப்பட்ட அவர், மாலை 4.30 மணியளவில் இஸ்ரேலின் பென் குரின் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார்.
அங்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனிப்பட்ட முறையில் சென்று வரவேற்றார். நெதன்யாகுவின் மனைவி சாராவும் உடன் இருந்து மோடியை அன்புடன் வரவேற்றார். இது மோடியின் இஸ்ரேலுக்கு இரண்டாவது பயணம் ஆகும்.
விமான நிலையத்தில் பாரம்பரிய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன்பின் இரு பிரதமர்களும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அறிவியல்-தொழில்நுட்பம், புத்தாக்கம், விவசாயம், நீர் மேலாண்மை, ராணுவ-பாதுகாப்பு, வர்த்தகம்-முதலீடு, மக்களிடையே உறவுகள் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதித்தனர். இந்தியா-இஸ்ரேல் உறவு இப்போது மிகவும் ஆழமானது என்பதை இது உறுதிப்படுத்துகிறது.
இதையும் படிங்க: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! மோடிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நெதன்யாகு! இந்திய பாரம்பரிய உடையில் இஸ்ரேல் பிரதமர்!
நேற்று மாலை இஸ்ரேல் நாடாளுமன்றமான க்னெசெட்டில் (Knesset) பிரதமர் மோடி உரையாற்றினார். இது வரலாற்று நிகழ்வு – இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய முதல் இந்திய பிரதமர் மோடி. உரையில் கடந்த 2023 அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலை கடுமையாக கண்டித்தார்.
"140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகள், நட்பு மற்றும் மரியாதையை கொண்டு வந்திருக்கிறேன். ஹமாஸின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்துக்குரியது. உங்கள் வலியை நாங்களும் உணர்ந்தோம், துயரத்தை பகிர்ந்தோம். பொதுமக்களை கொல்வதை எந்த காரணத்தாலும் நியாயப்படுத்த முடியாது. இந்த தருணத்தில் இந்தியா முழு நம்பிக்கையுடன் இஸ்ரேலுடன் உறுதியாக நிற்கிறது" என்று தெளிவாக கூறினார்.
I am deeply honoured to receive the Medal of the Knesset.
— Narendra Modi (@narendramodi) February 25, 2026
I accept it with humility and gratitude.
This honour is not a tribute to an individual, but to the enduring friendship between India and Israel.
It reflects the shared values that guide our two nations.@KnessetENG https://t.co/OGtBMTsLuC pic.twitter.com/6H6Dt9sP6v
மும்பை தாக்குதல் உள்ளிட்ட பயங்கரவாத சம்பவங்களை நினைவுகூர்ந்த மோடி, பயங்கரவாதத்துக்கு எதிரான சமரசமற்ற கொள்கையை இந்தியாவும் இஸ்ரேலும் கடைப்பிடிப்பதாக வலியுறுத்தினார். பயங்கரவாதம் சமூகங்களை சீர்குலைத்து வளர்ச்சியை தடுப்பதாக குறிப்பிட்டு, உலகளாவிய நடவடிக்கை தேவை என்றார்.
காசா அமைதி திட்டத்தை இந்தியா ஆதரிப்பதாகவும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் பெற்ற இந்த திட்டம் பாலஸ்தீன பிரச்சினை உட்பட பிராந்தியத்தில் நீதியான, நீடித்த அமைதியை உறுதி செய்யும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். "அமைதிக்கான பாதை எளிதல்ல, ஆனால் உரையாடல், அமைதி, நிலைத்தன்மைக்காக இந்தியா உங்களுடனும் உலகத்துடனும் இணைகிறது" என்று முடித்தார்.
இந்த உரைக்குப் பின், இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் அமினர் ஒகானா, 'நெசெட் சபாநாயகர்' (Speaker of the Knesset Medal) பதக்கத்தை வழங்கினார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் உயரிய இந்த பதக்கத்தை பெறும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். அமெரிக்கா-ஈரான் பதற்றம், மத்திய கிழக்கு சூழல் ஆகியவற்றுக்கு இடையே இந்த பயணம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. இந்தியா-இஸ்ரேல் நட்பு இன்னும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 9 ஆண்டுகளுக்கு பின் விஜயம்! மோடி செய்த மேஜிக்! இந்தியா - இஸ்ரேல் இடையே கையெழுத்தானது ராணுவ ஒப்பந்தம்!