"ஸ்டாலின் சார் யாருனு தெரியுமா?" தவெக-வுக்கு ஆ.ராசா எம்பி அனல் பறக்கும் கேள்வி!
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆட்சியையே பந்தயம் வைப்பவர் தான் ஸ்டாலின் சார், நீங்க தமிழ்த்தாய் வாழ்த்துக்குக் கெஞ்சுறீங்க எனத் தவெக அரசுக்கு ஆ.ராசா எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக அரசியல் களத்தில் தவெக மற்றும் திமுக ஆகிய இரு துருவங்களுக்கு இடையே நாளுக்கு நாள் காரசாரமான வார்த்தை யுத்தங்கள் உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளன. திருச்சியில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பேசிய அரசியல் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. ஆ.ராசா அவர்கள் தற்பொழுது தவெக அரசுக்கு எதிராகப் பகிரங்கமான அனல் பறக்கும் சவாலை அதிரடியாக முன்வைத்துள்ளார்.
நீங்கள் கேட்கும் 'Stalin சார்' யார் தெரியுமா? என்று தனது பேச்சைத் தொடங்கிய ஆ.ராசா, "இந்திய நாடாளுமன்றத்தில் அரசியல் சாசனத் திருத்தத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% (EWS) இடஒதுக்கீட்டை, சமூக நீதிக்கு எதிரானது என்று கூறி தமிழ்நாட்டிற்குள் எக்காரணம் கொண்டும் அனுமதிக்க மாட்டேன் என்று நெஞ்சுரத்தோடு கறாராகப் பிரகடனம் செய்தவர்தான் ஸ்டாலின் சார்" என்று அலாதியான பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசின் அரசியல் சாசன சட்டத்தை ஒரு மாநில அரசு மீறினால், அந்த மாநில ஆட்சியையே கலைக்கலாம் என்பதுதான் சட்டம். ஆனால், எங்களது தமிழ்நாட்டுத் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி உரிமைகளைக் காப்பதற்காக, அந்தச் சட்டத்தை மீறி ஆட்சியே கலைந்தாலும் கவலையில்லை என்ற துணிச்சலோடு நாங்கள் அதை எதிர்த்து மீறியிருக்கிறோம் என்று அதிரடியாக முழங்கினார்.
இதையும் படிங்க: வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்! கலைஞரின் முழக்கத்தை நினைவுபடுத்திய ஆ.ராசா!
தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாகச் சாடிய ஆ.ராசா, "ஆட்சியே போனாலும் கவலையில்லை என்று சமூக நீதிக்காகப் போராடிய வரலாறு எங்களுடையது. ஆனால், நீங்களோ தற்பொழுது வெறும் தமிழ்த்தாய் வாழ்த்திற்காக டெல்லியிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்களே! உங்களது வீரம் இவ்வளவுதானா? இந்த நிர்வாகத் திறமையின்மையை நாங்கள் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தக் கூடாதா?" என்று முதல்வர் விஜய்யின் திருச்சி பேச்சுக்கு அனல் பறக்கும் வகையில் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: மக்கள் கொடுத்த பவரை வச்சு என்ன பண்ண போறீங்க? முதல்வர் விஜய்க்கு திமுக முன்னாள் எம்எல்ஏ கேள்வி!