பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!
தி.மு.க., - அ.தி.மு.க., ஆதரவுடன் முதல்வர் பதவியை பெற, நீண்ட நேரம் காத்திருந்த வி.சி.க., தலைவர் திருமாவளவனின் கனவு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியால் தகர்ந்தது.
தமிழக அரசியலில் ஆட்சியமைப்பு தொடர்பான கடைசி நேர அரசியல் நகர்வுகள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை முதலமைச்சராக்கும் முயற்சி நடைபெற்றதாக கூறப்படும் தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருகின்றன.
அரசியல் வட்டார தகவல்களின் படி, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் சாத்தியம் குறித்து சில கட்டங்களில் ஆலோசனை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த முயற்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் முழுமையான ஆதரவு அளிக்கவில்லை. இதனால் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் நிலைக்கு சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக கூட்டணி அமைத்தால் மக்கள் மத்தியில் எதிர்ப்பு உருவாகும் என்ற அச்சம் எழுந்ததாக கூறப்படுகிறது. அதனை சமாளிக்கும் வகையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்த பொதுவான தலைவராக திருமாவளவனை முதலமைச்சராக முன்மொழியும் யோசனை சில தரப்புகளில் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த 8ம் தேதி இரவு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் இல்லத்தில் முக்கிய ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பில் உதயநிதி உள்ளிட்டோர் கலந்துகொண்டதாகவும், திருமாவளவனும் பங்கேற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் பதவி உறுதி செய்யப்பட்டால் தவெக ஆதரவு முடிவை மறுபரிசீலனை செய்யலாம் என்ற நிலைப்பாட்டை திருமாவளவன் எடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தனது இருப்பிடம் வெளியில் தெரியாமல் இருக்க திருமாவளவன் பல ஹோட்டல்களில் அறைகள் பதிவு செய்து தங்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், “இது திருமா காலம்” என்ற வாசகமும் பரவலாக பகிரப்பட்டது.
ஆனால் இந்த திட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பாமக தலைவர் அன்புமணி ஆதரவு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக முதல்வர் பதவியை தானே ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் பழனிசாமி உறுதியாக இருந்ததால், திருமாவளவனின் முதலமைச்சர் கனவு இறுதியில் நிறைவேறவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னரே, எந்த நிபந்தனையும் இன்றி தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க திருமாவளவன் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு மவுசு!! கட்சி தாவ தயாராகும் கரை வேட்டிகள்! கொங்கு மண்டலத்தில் காத்திருக்கும் அதிர்ச்சி!