×
 

ஹார்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா கடும் தாக்குதல்! இந்திய மாலுமிகள் 3 பேர் பலி!! ஓமனில் பயங்கரம்!

ஓமன் கடற்கரைக்கு அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் கொல்லப்பட்டனர்.

ஓமன் கடற்கரை அருகே ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்காசியப் பகுதியில் தொடரும் போர் பதற்றத்துக்கு இடையே, கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், நேற்று நடைபெற்ற இந்தத் தாக்குதல் இந்தியாவுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்தக் கப்பலில் மொத்தம் 28 மாலுமிகள் இருந்தனர். இதில் 24 பேர் இந்தியர்கள். தாக்குதலுக்குப் பிறகு கப்பலில் இருந்து அவசர உதவி கோரப்பட்டது. ஓமன் கடற்படையின் உதவியுடன் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. தீப்பிடித்த கப்பலில் இருந்து 21 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மாயமான மூன்று இந்தியர்களை தேடும் பணி நடைபெற்று வந்த நிலையில், அவர்கள் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 8-ம் தேதி அதே பகுதியில் மற்றொரு இந்தியக் கப்பல் மீது தாக்குதல் நடைபெற்றது. அப்போது 24 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்திய மாலுமிகள் உயிரிழக்கும் சம்பவம் நடைபெற்றுள்ளது இந்திய கடல் வணிகத்துறை வட்டாரத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி அருகே ஈரானின் ராணுவ தளம்!! வான்வழி தாக்குதல் நடத்திய அமெரிக்கா! போர் பதற்றம்!

மத்திய அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டுள்ளது. மீட்கப்பட்ட மாலுமிகளை விரைவில் தாயகம் அழைத்து வரவும், உயிரிழந்த மூவரின் உடல்களை இறுதிச் சடங்குகளுக்காக உடனடியாக திருப்பி அனுப்பவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் கடல் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஓமன் அரசுடன் தொடர்பில் இருந்து மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

ஹார்முஸ் ஜலசந்தி உலகின் மிக முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்து வழித்தடம் ஆகும். இப்பகுதியில் தொடரும் பதற்றம் உலக பொருளாதாரத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. இந்திய மாலுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து மத்திய அரசு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்த சம்பவம் இந்தியக் கடல் வணிகத்தில் ஈடுபடும் மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்வியெழுப்பியுள்ளது. 

இதையும் படிங்க: நடுக்கடலில் கைவிடப்படும் கப்பல்கள்! இந்திய மாலுமிகளே அதிகம் பாதிக்கப்படுவதாக ஆய்வில் பகீர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share