போர் நிறுத்ததின் அடுத்த கட்டம்!! காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அறிவித்தார் ட்ரம்ப்!
அமெரிக்க அதிபர் டிரம்ப், காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக அறிவித்தார். அவர், இது பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க ஆதரவு திட்டத்தின் இரண்டாவது கட்ட நடவடிக்கை என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசாவில் அமைதியை நிலைநாட்டும் வகையில் புதிய அமைதி வாரியத்தை அமைப்பதாக அறிவித்துள்ளார். இது பிராந்தியத்தில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்காவின் ஆதரவுத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுடன் தொடர்புடையது.
ரஷ்யாவும் உக்ரைனும் இடையிலான நான்கு ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அமெரிக்கா ஒரு அமைதி ஒப்பந்தத்தை முன்மொழிந்தது. சமீபத்தில் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, புளோரிடாவில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பில் ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாகவே காசா அமைதி வாரியத்தை அமைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காசாவுக்கு பாக்., படையை அனுப்புங்க! அழுத்தம் தரும் ட்ரம்ப்! உள்நாட்டு எதிர்பால் கையை பிசையும் அசிம்!
டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் இதுகுறித்து விரிவாகக் கூறியுள்ளார்: “காசாவின் 20 அம்ச அமைதித் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு நாங்கள் அதிகாரப்பூர்வமாக நுழைந்துவிட்டோம். அமைதி வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. காசா நிர்வாகத்திற்கான தேசியக் குழுவிற்கு நான் ஆதரவளிக்கிறேன். எகிப்து, துருக்கி மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் ஆதரவுடன், ஹமாஸுடன் ஒரு விரிவான ஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தை உறுதி செய்வோம்.
இதில் அனைத்து ஆயுதங்களையும் ஒப்படைப்பதும், ஒவ்வொரு சுரங்கப்பாதையையும் அகற்றுவதும் அடங்கும். ஹமாஸ் உடனடியாக தனது வாக்குறுதிகளைக் காப்பாற்ற வேண்டும். இஸ்ரேலிடம் உள்ள உயிரிழந்தவர்களின் உடல்களைத் திருப்பி ஒப்படைப்பது உட்பட, தாமதமின்றி முழுமையான ஆயுதக் குறைப்பு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.
நான் முன்பே கூறியது போல், அவர்கள் இதை எளிதான வழியிலோ அல்லது கடினமான வழியிலோ செய்யலாம். காசா மக்கள் போதுமான அளவு துன்பப்பட்டுவிட்டார்கள். இதுவே சரியான நேரம்.”
இந்த அமைதி வாரியம் காசாவில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும் என டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவை முடிவுக்குக் கொண்டுவர இந்தத் திட்டம் உதவும் என்று சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. ரஷ்யா-உக்ரைன் போருடன் இணைந்து அமெரிக்காவின் இந்த முயற்சிகள் உலக அமைதிக்கு பெரும் பங்களிப்பை அளிக்கும் என கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ரஷ்யா- உக்ரைன் அமைதி ஒப்பந்தம்!! ஜெலன்ஸ்கியை சந்தித்த பின் ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!