எப்படியாவது ஜெயிச்சிருங்க! இல்லையினா என் பதவி போயிரும்? புலம்பி தள்ளிய அதிபர் ட்ரம்ப்!
இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன், என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்த கட்சியினரிடையே புலம்பித் தள்ளியுள்ளார்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2026 இடைக்காலத் தேர்தலில் (மிட் டேர்ம் எலக்ஷன்ஸ்) குடியரசுக் கட்சி பெரும்பான்மையை இழந்தால், ஜனநாயகக் கட்சியினர் தன்னை மீண்டும் பதவி நீக்கம் (இம்பீச்மெண்ட்) செய்ய எந்தக் காரணத்தையும் கண்டுபிடிப்பார்கள் என்று எச்சரித்துள்ளார். இதனால் கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து இடைக்காலத் தேர்தல் நடப்பது வழக்கம். இதில் கீழ்சபை (ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டேட்டிவ்ஸ்)யின் அனைத்து 435 இடங்களுக்கும், மேல்சபை (செனட்)யின் 100 இடங்களில் மூன்றில் ஒரு பங்கான 33 அல்லது 34 இடங்களுக்கும் தேர்தல் நடக்கும். டிரம்ப் 2024 தேர்தலில் வெற்றி பெற்று 2025இல் பதவியேற்ற நிலையில், 2026 நவம்பரில் இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜனவரி 6 ஆம் தேதி வாஷிங்டனில் குடியரசுக் கட்சி கீழ்சபை உறுப்பினர்களின் ஆண்டு கூட்டத்தில் பேசிய டிரம்ப், "நவம்பர் இடைக்காலத் தேர்தலில் நாம் வெற்றி பெறாவிட்டால், ஜனநாயகக் கட்சியினர் என்னை பதவி நீக்கம் செய்ய எந்தக் காரணத்தையும் கண்டுபிடிப்பார்கள்.
இதையும் படிங்க: மக்கள் மேல தாக்குதல் நடந்தா நாங்க வருவோம்!! ஈரானுக்கு அமெரிக்கா வார்னிங்!! ட்ரம்ப் மாஸ்டர் ப்ளான்!
அதனால் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பெரும் வெற்றி பெற வேண்டும்" என்று கூறினார். முதல் பதவிக்காலத்தில் இரு முறை பதவி நீக்கம் செய்யப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், "எதற்காகவும் இரு முறை இம்பீச்மெண்ட் செய்யப்பட்டேன்" என்றும் தெரிவித்தார்.
வரலாற்றுரீதியாக, அதிபரின் கட்சி இடைக்காலத் தேர்தலில் இடங்களை இழப்பது வழக்கம். இதனால் குடியரசுக் கட்சி தற்போது கீழ்சபையில் மெல்லிய பெரும்பான்மை வைத்திருந்தாலும், தோல்வி ஏற்பட்டால் ஜனநாயகக் கட்சி காங்கிரசை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விசாரணைகளையும் பதவி நீக்க நடவடிக்கைகளையும் தொடங்கலாம் என்ற அச்சத்தை டிரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் டிரம்ப், கட்சி உறுப்பினர்களை சுகாதாரம், பாலின சமத்துவம், குற்றங்கள் தடுப்பு போன்ற விவகாரங்களில் தனது கொள்கைகளை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யும்படி அறிவுறுத்தினார். "நாம் வரலாறு படைத்து பெரும் வெற்றி பெறுவோம்" என்று உற்சாகமாக கூறிய அதிபர், கட்சியினரிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒன்றிணையும்படி கேட்டுக்கொண்டார்.
டிரம்பின் இந்த எச்சரிக்கை அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே சில விவகாரங்களில் விசாரணை கோரி வரும் நிலையில், இடைக்காலத் தேர்தல் முடிவுகள் டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தை பெரிதும் பாதிக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதையும் படிங்க: ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி!! மக்கள் போராட்டம் வெடித்ததில் 10 பேர் பலி!