×
 

சீனாவில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள்..!! பீதியில் தெருவில் தஞ்சமடைந்த மக்கள்..!!

இந்த நிலநடுக்கங்கள் அப்பகுதியின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான, அண்டை மாகாணமான கான்சுவில் உள்ள லான்சூவையும் பாதித்தன.

சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள கிங்ஹாய் மாகாணத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தொடர்ந்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது. சீன நிலநடுக்க வலைப்பின்னல் மையத்தின் அறிக்கையின்படி, காலை 11:16 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலும், அதற்கு 18 நிமிடங்களுக்குப் பிறகு 11:34 மணிக்கு 5.8 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாயின. இரண்டும் 10 கிலோமீட்டர் ஆழத்தில், சிங்ஹை மாவட்டத்தில் நிகழ்ந்தன.

இந்தப் பகுதி மக்கள் தொகை குறைவான, உயர்ந்த மலைப்பகுதியாகும். கிங்ஹாய் மாகாணத் தலைநகரான சினிங்கிலிருந்து சுமார் 244 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இருப்பினும் அதிர்வுகள் அண்டை மாகாணமான கான்சுவில் உள்ள லான்சூ நகரம் வரை உணரப்பட்டன. அங்கு வீடுகளில் விளக்குகள் ஆடியதும், மலைப்பாறைகளிலிருந்து புழுதி மேகங்கள் எழுந்ததும் மக்களை அச்சமடையச் செய்தன. பலர் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர்.

கிங்ஹாய் மாகாணம் ஹிமாலயத் தொடர்ச்சியான திபெத்திய பீடபூமியின் ஒரு பகுதியாக இருப்பதால் அடிக்கடி நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது. அதிகாரிகள் இதுவரை உயிரிழப்பு அல்லது கட்டிடங்கள் இடிந்ததாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பொது ஒழுங்கு சீராக உள்ளதாகவும், அவசர மீட்புக் குழுக்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நில அதிர்வுகளைக் கண்காணித்து கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: விண்வெளித் துறையில் புதிய வரலாறு..!! ராக்கெட் பூஸ்டரை கடலில் தரையிறக்கி அசத்திய சீனா..!!

இதையும் படிங்க: சீனாவுக்கு தற்காலிக விலக்கு: மத்திய அரசின் மின் திட்ட டெண்டர்களில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு அனுமதி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share