×
 

ஈரானை குறிவைக்கும் அமெரிக்கா - இஸ்ரேல்? உலகையே பதறவைக்கும் புதிய போர் திட்டம்!

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய இலக்குகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேற்காசியாவில் மீண்டும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரானின் முக்கிய எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன.

கடந்த சில வாரங்களாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஈரானின் முக்கிய இடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலடியாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை ஈரான் குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குவைத், பஹ்ரைன், எகிப்து மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ வசதிகள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. குவைத்தில் பறந்த பல ஈரான் ட்ரோன்கள் வானிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. எகிப்து மீதும் தாக்குதல் முயற்சி நடைபெற்றதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: அமெரிக்கா தொடர்ந்து அச்சுறுத்தும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க முடியாது! ஈரான் கடும் எச்சரிக்கை!

இந்த சூழ்நிலையில், ஈரானின் எண்ணெய் உற்பத்தி மையங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய ராணுவ இலக்குகளை குறிவைத்து அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து புதிய வான்வழித் தாக்குதலை மேற்கொள்ளும் திட்டம் பரிசீலனையில் இருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் இறுதி ஒப்புதல் வழங்கவில்லை என்றும், இருப்பினும் வார இறுதிக்குள் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன. இதனால் மேற்காசியாவில் நிலவும் பாதுகாப்பு சூழல் மேலும் மோசமடையக்கூடும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது.

இதற்கிடையில், பதற்றத்தை குறைக்க இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் தற்போதைய சூழல் தொடர்ந்து பதற்றமாக இருப்பதால், அடுத்த சில நாட்களில் நடைபெறும் அரசியல் மற்றும் ராணுவ முடிவுகள் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளன.

இதையும் படிங்க: கொந்தளிக்கப் போகும் காஸ்பியன் கடல்... ஈரானை அழிக்க அமெரிக்காவின் நரித்தனம்... டிரம்ப்-ஜெலன்ஸ்கி சந்திப்பின் பகீர் பின்னணி...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share