மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதை எக்காரணம் கொண்டும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என ட்ரம்ப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஈரான் நாட்டின் அணுசக்தித் திட்டம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளை அதிரவைக்கும் வகையிலான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஈரான் தனது அணு ஆயுத நிலைப்பாட்டில் சமரசம் செய்யவில்லை எனில், வரலாறு காணாத விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அவர் நேரடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்கள் வைத்திருப்பதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது. இது சர்வதேசப் பாதுகாப்பிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரான் விவகாரத்தில் அடுத்தகட்டமாக என்ன நடக்கும் என்பது குறித்த தெளிவான முடிவு இன்னும் 10 நாட்களுக்குள் உலகிற்குத் தெரியவரும் என அவர் ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளார்.
ஈரான் தனது பிடிவாதத்தைக் கைவிட்டு, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகள் முன்வைக்கும் அணுசக்தி ஒப்பந்தத்திற்கு உடன்பட வேண்டும். அவ்வாறு உடன்படத் தவறினால், ஈரான் அரசு மிக மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என எச்சரித்துள்ளார். ஏற்கனவே ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தாண்டி, அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கும் வகையிலான கூடுதல் நடவடிக்கைகள் மற்றும் இராணுவ ரீதியிலான அழுத்தங்கள் குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருவதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
அதிபர் ட்ரம்பின் இந்தத் திடீர் எச்சரிக்கை சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானின் அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமா என்ற அச்சமும் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. 10 நாட்கள் கெடு முடிவதற்குள் ஈரான் இணங்கி வருமா அல்லது மோதல் போக்கு உச்சத்தை எட்டுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: சர்வதேச விதிகள் மீறப்படுகின்றன! ட்ரம்ப்பின் வரி விதிப்பு கொள்கைக்கு மேக்ரான் கண்டனம்.!!