×
 

மத்திய கிழக்கில் மீண்டும் போர் மேகம்.. டிரம்பின் உத்தரவால் உலக நாடுகள் பதற்றம்..!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

அமெரிக்கா-ஈரான் மோதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ஜோர்டனில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடியாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது படைகளுக்கு மீண்டும் தாக்குதல் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இன்று அதிகாலை முதல் அமெரிக்க விமானப்படைகள் ஈரானின் பல்வேறு இராணுவ இலக்குகளை இலக்காகக் கொண்டு சரமாரியான வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன.

இந்த வாரத் தொடக்கத்தில் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐஆர்ஜிசி) ஜோர்டனில் உள்ள அமெரிக்க தளங்களை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது. அமெரிக்க மத்திய தளபதி அலுவலகம் (சென்ட்காம்) அனைத்து ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்து அழித்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. ஜோர்டானிய விமானப் பாதுகாப்பு அமைப்புகளும் இதில் பங்கேற்றன. இருப்பினும், எதிர்கால அச்சுறுத்தல்களை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் இந்த பதிலடித் தாக்குதல் தொடங்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் விளக்கியுள்ளனர். 

இதற்கு முன் அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதல்களை தற்காலிகமாக நிறுத்தி, பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு அளித்திருந்தது. ஆனால் ஈரானின் புதிய தாக்குதல் அந்த முயற்சிகளை முறியடித்துள்ளது. டிரம்ப், “ஈரானை மிகக் கடுமையாகத் தாக்கப் போகிறோம். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிப்போம். எங்கள் படைகள் மீதான தாக்குதலை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டோம்” என்று எச்சரித்தார். சென்ட்காம் அறிக்கையில், ஐஆர்ஜிசியின் கட்டளை மையங்கள், ஏவுகணை மற்றும் ட்ரோன் வசதிகள், கடற்கரை கண்காணிப்பு தளங்கள் உள்ளிட்ட பல இலக்குகள் தாக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 6வது நாளாக அடி பொளக்கும் அமெரிக்கா... ஈரான் மீது சரமாரி குண்டுமழை...!

அதே நேரத்தில் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு ஆயுதக் குழுக்களை இலக்காகக் கொண்டு அமெரிக்க-சவுதி அரேபிய படைகள் இணைந்து தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த மோதல்கள் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை அதிகரித்துள்ளன. ஈரான் மேலும் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பிராந்திய அளவில் பரந்த அளவிலான மோதல் உருவாகும் அபாயம் உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. இது இந்தியா உள்ளிட்ட எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கு கூடுதல் பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத்தும். இரு தரப்பினரும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், தற்போதைய தாக்குதல்கள் அந்த முயற்சிகளுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.

இதையும் படிங்க: 'Where to kill Melania?' ஈரான் வெளியிட்ட ஷாக் வீடியோ..!! டிரம்ப் குடும்பத்தை சுற்றும் புதிய சர்ச்சை!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share