போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!
காசாவில் உடனடி நிபந்தனையற்ற நிரந்தரயுத்த நிறுத்தத்தை கோரும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன.
காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை: அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப்..!
ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
இந்த முறை ஹமாஸ் பயங்கரவாதிகளை அடியோடு விரட்டி விட்டு மொத்த காசாவையும் கைப்பற்றும் நோக்குடன் தீவிர போரில் இறங்கியது. முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது.
ஒரே நாளில் மட்டும் இஸ்ரேல் குண்டு வீச்சில் காசாவில் 60 பேர் மரணம் அடைந்தனர். 20 மாதங்களாக நடக்கும் போரில் இதுவரை 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். முன்பை விட மிகப்பெரிய அளவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், அரபு நாடுகளை தாண்டி பல நட்பு நாடுகளும் கூட இஸ்ரேலுக்கு எதிராக போர் கொடி தூக்கின.
இருப்பினும் இஸ்ரேலுக்கு பக்கப்பலமாக அமெரிக்கா இருந்தது. காசாவை முழுமையாக கைப்பற்ற வேண்டும் என்பது டிரம்ப் வகுத்து கொடுத்த திட்டம் தான். இதனால் அமெரிக்காவுக்கு எதிராகவும் இந்த விவகாரம் திரும்ப துவங்கியது. சமீபத்தில் சவுதி மற்றும் வளைகுடா நாடுகளுக்கு டிரம்ப் சென்றிருந்தார்.
அங்குள்ள முஸ்லிம் நாடுகளும் போரை நிறுத்தும் படி டிரம்பிடம் வலியுறுத்தின. இதை தொடர்ந்து அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் பேசி ஒரு போர் நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வந்தன.
அமெரிக்காவுக்கான மத்திய கிழக்கின் சிறப்பு தூதர் விட்காஃப் இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிமுகம் செய்து வைத்தார். காசாவை கைப்பற்றியே தீருவோம் என்று களம் இறங்கிய இஸ்ரேல் வேறு வழி இன்றி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதாக அறிவித்தது.
ஹமாசை ஒழிக்காமல் போரை நிறுத்த மனம் இல்லை. இருப்பினும் பிணைக்கைதிகளின் குடும்பத்தினர், உறவினருக்காக தான் இந்த முடிவை எடுத்து இருக்கிறேன் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார்.
இந்த நிலையில், ஸ்ரேல் பிணை கைதிகளை ஹாமாஸ் விடுவிக்கவில்லை. இதனால், கோபமடைந்த இஸ்ரேல், மீண்டும் காசா மீது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. சர்வதேச நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால், காசாவில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரும் தீர்மானம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்டது.
இதில் தடையற்ற மனிதாபிமான உதவி, பிணை கைதிகள் விடுதலை ஆகிய அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. இந்த மசோதாவுக்கு மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், வீட்டோ எனப்படும் சிறப்பு அதிகாரத்தை அமெரிக்கா பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்தது. இதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நிரந்தர உறுப்பினர்களுக்கு மட்டும் வீட்டோ சிறப்பு அதிகாரம் உள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் அமெரிக்க தூதர் டொரோத்தி ஷியா கூறும்போது, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட்டு காசாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதில் அமெரிக்க உறுதியாக இருக்கிறது. இது தொடர்பாக ஏற்கனவே ஒரு ஒப்பந்ததை முன் வைத்து இருக்கிறோம். ஆனால், தற்போது கொண்டுவரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் போர் நிறுத்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக இருக்கிறது எனக்கூறினார்.
அமெரிக்க வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறும்போது, காசா தொடர்பான ஐநா தீர்மானம் ஹமாஸ் பயங்கரவாதிகளின் நலன்களை மட்டுமே முன்னிறுத்தி உள்ளது. காசாவை விட்டு ஹமாஸ் வெளியேற வேண்டும் என தீர்மானத்தில் சொல்லப்பட்டு இருக்க வேண்டும் என்றார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு அவங்க மொழியிலேயே பதிலடி கொடுத்தோம்! அமெரிக்காவில் சசிதரூர் கெத்து ரிப்ளை!