ட்ரம்ப் அழைத்தும் அமெரிக்க செல்ல மறுத்த மோடி.. தனி அறையில் சந்தித்த பாக். ராணுவ தளபதி.. வெடிக்கும் புது பூகம்பம்..!
விமர்சனங்கள் எழுவதை தவிர்க்கவே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வரும்படி அழைப்பு விடுத்தும், நேரில் சந்திப்பதை பிரதமர் நரேந்திர மோடி தவிர்த்துள்ளார்.
பிரதமர் மோடி சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்டு கனடா சென்றார். கனனாஸ்கிஸ் நகரில் நடந்த ஜி 7 நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். மாநாட்டின் இடையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேச திட்டமிட்டிருந்தார்.
ஆனால், இஸ்ரேல்– ஈரான் போர் தீவிரமானதால் அந்த சந்திப்பு நடக்கவில்லை. ஈரான் – இஸ்ரேல் போர் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்புக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்துவதற்காக, அதிபர் டிரம்ப் மாநாட்டின் பாதியிலேயே வெளியேறி, வாஷிங்டனுக்கு புறபட்டு சென்றதால், மோடியுடனான சந்திப்பு நடக்க வழியில்லாமல் போனது.
கனனாஸ்கிஸ் நகரில் இருந்தபடி, அதிபர் டிரம்புடன் பிரதமர் மோடி டெலிபோனில் பேசினார். இந்த உரையாடல் 35 நிமிடங்களுக்கு நீடித்தது. ஏப்ரல் 22ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குததைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுக்கப்பட்டது.
இதையும் படிங்க: அணு ஆயுத இருப்பில் டாப் கியரில் இந்தியா! அடிச்சா மொத்தமா முடிஞ்சிரும்.. குலை நடுங்கி கிடக்கும் பாக்.,
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத இயக்கம்தான் தாக்குதலை நடத்தியது என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டு வீசி அழித்தோம். பாகிஸ்தான் மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை என மோடி கூறினார்.
இதன்மூலம் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியா உறுதியாக உள்ளது என்ற மெசேஜ் உலக நாடுகளுக்கு எடுத்துச் சொல்லப்பட்டது என்றார். இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த சண்டை ராணுவ அதிகாரிகள் அளவில் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
போரை நிறுத்தும்படி பாகிஸ்தான் கேட்டுக் கொண்டதாலேயே போரை நிறுத்த இந்தியா முடிவு செய்தது எனவும் டிரம்பிடம் மோடி கூறினார். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் 3வது நாட்டின் சமரச முயற்சியை நாங்கள் என்றுமே அனுமதித்தது இல்லை. இனியும் அனுமதிக்க மாட்டோம் எனவும் டிரம்பிடம் மோடி திட்டவட்டமாக கூறினார்.
அதன்பிறகு மோடியை அதிபர் ட்ரம்ப் அமெரிக்கா வரும்படி அழைத்தார். ஆனால் மோடி அந்த அழைப்பை நிராகரித்தார். இந்தியாவில் நடக்கும் குவாட் QUAD மாநாட்டுக்கு நீங்கள் நிச்சயம் வர வேண்டும் என பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப்பை அழைத்தார். அதை டிரம்பும் ஏற்றுக் கொண்டார். இதனை அடுத்து ட்ரம்ப் செய்தது தான் தற்போது சர்ச்சையாகி உள்ளது. ஐ லவ் பாகிஸ்தான் என பதிவிட்ட ட்ரம்ப். பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு தனது வெள்ளை மாளிகையில் மதிய விருந்து வைத்துள்ளார்.
இஸ்ரேல்-ஈரான் இடையிலான மோதல் வலுத்துவரும் சூழலில், அமெரிக்க அதிபா் மாளிகையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் முனீருக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது. ஈரானுடன் பாகிஸ்தான் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், எதனால் இந்தச் சந்திப்பு நடைபெற்றது என்ற உறுதியான தகவல் உடனடியாக வெளியாகவில்லை.
வெளிநாட்டு ராணுவத் தலைமை தளபதி ஒருவருக்கு அமெரிக்க அதிபா் மதிய விருந்து அளிப்பது அரிதாகவே நடைபெற்றுள்ளது. ஏற்கெனவே அந்நாட்டு ராணுவத் தலைமை தளபதிகளாக இருந்த அயூப் கான், ஜியா உல்-ஹக், பா்வேஸ் முஷாரஃப் ஆகியோா் இதுபோல அமெரிக்க அதிபா்களைச் சந்தித்துள்ளனா். ஆனால், அவா்கள் அப்போது பாகிஸ்தான் அதிபா்களாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, முனீருடனான சந்திப்பு குறித்து டிரம்ப் கூறுகையில், ‘சண்டையை நிறுத்தியதில் இந்தியாவில் எப்படி பிரதமா் மோடி பங்காற்றினாரோ அதேபோன்று பாகிஸ்தானில் முனீா் பங்காற்றினாா்’ என்றாா். ஈரான் மீது தாக்குதல் நடத்த நீங்கள் (டிரம்ப்) முடிவு எடுத்துவிட்டீா்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த டிரம்ப், ‘தாக்குதல் நடத்தலாம், நடத்தாமலும் இருக்கலாம்’ என்றாா்.
இதையும் படிங்க: ட்ரம்புடன் பாக்., ராணுவ தளபதி ரகசிய சந்திப்பு..! இந்தியாவுக்கு எதிராக சதியா? ஈரானுக்கு வைக்கபோகும் ஆப்பா?