×
 

வங்கதேச அமைச்சரவை கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்.. தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு..!

வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவர் பதவியில் தொடர உள்ளதாக முடிவுகள் வெளியாகி உள்ளன.

வங்கதேசத்தில் கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா் ஷேக் ஹசீனா அவரது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். இதையடுத்து நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்  முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்தது. இடைக்கால அரசின் தலைமை ஆலோசகராக முகமது யூனுஸ் பதவி வகிக்கிறார்.

தொடக்கத்தில் இடைக்கால அரசுக்கு அந்நாட்டின் ராணுவ தளபதி வேக்கர் உஸ் ஜமான் ஆதரவு அளித்து வந்தார். ஷேக்ஹசீனா ஆட்சியை கவிழ்க்க காரணமாக இருந்த மாணவர் அமைப்புகள் சேர்ந்து National Citizen Party தேசிய குடிமக்கள் கட்சி எனும் கட்சியை துவங்கி, முகமது யூனுஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்து வருகின்றன.

சமீப காலமாக எதிர்கட்சிகள் மற்றும் ராணுவத்திடம் இருந்து கடும் நெருக்கடிகளை சந்தித்து வரும் முகமது யூனுஸ் கடும் விரக்தியில் உள்ளார்.சமீபத்தில் ராணுவ தளபதியிடம் ஆலோசிக்காமல், தேசிய பாதுகாப்பு ஆலோசகரை யூனுஸ் நியமித்தார். இதனால், இரு தரப்புக்கும் இடையே உரசல் ஏற்பட்டது.இதையடுத்து, உடனடியாக பொதுத்தேர்தலை அறிவிக்க யூனுசுக்கு ராணுவ தளபதி ஜாமன் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது தொடர்பாக பிற தளபதிகளுடன் ஆலோசிக்க அவசரக் கூட்டத்தை கூட்டினார். பெரும்பாலான ராணுவ தளபதிகள் தேர்தல் நடத்த ஆதரவு தெரிவித்தனர். 

இதையும் படிங்க: ரொம்ப நெருக்கடி கொடுக்குறாங்க.. ராஜினாமா பண்ணப்போறேன்.. வங்கதேசத்தில் மீண்டும் கவிழும் ஆட்சி..!

இது பிரதமர் யூனுஸூக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், யூனுஸுக்கு எதிராக வங்கதேச தலைநகர் டக்காவில் தேசியவாத கட்சியும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்த நெருக்கடிக்கு மத்தியில் இடைக்கால அரசின் தலைவர் பதவியை ராஜிநாமா செய்வதற்கு முகமது யூனுஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த தகவலை மாணவர்கள் தலைமையிலான தேசிய குடிமக்கள் கட்சி தலைவர் நிஹித் இஸ்லாம் உறுதிப்படுத்தினார். இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் யூனுஸ் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை. அவர்கள் டாக்காவின் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரே தலைமை ஆலோசகராக நீடிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். இந்த சூழலில், வங்கதேச அரசியல் ஆலோசகர்கள் அடங்கிய அமைச்சரவை கூட்டம் முஹமது யூனுஸ் தலைமையில், டாக்காவில் நேற்று நடந்தது. அப்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்தும், தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் அமைப்பின் வங்கதேச கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

கூட்டத்துக்குப் பின், திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத் கூறுகையில், “நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு நடுவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து வருகிறோம். ''தலைமை ஆலோசகர் யூனுஸ் எங்கள் வழிகாட்டியாக இருந்து வழி நடத்தி வருகிறார். ''பல சவால்களையும் கடந்து தான் நாங்கள் பணி செய்து வருகிறோம். கூட்டத்தின்போது, தலைமை ஆலோசகரின் ராஜினாமா குறித்த பேச்சு எழுந்தது. அந்த பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். அவர் அதை ஏற்றுக் கொண்டார். இடைக்கால அரசின் தலைவராக அவர் நீடிப்பார்,” என்றார்.

இதையும் படிங்க: வடகிழக்கு இந்தியாவுக்கு ஸ்கெட்ச்.. பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கும் வங்கதேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share