பிஞ்சு குழந்தைன்னு கூட பார்க்கலையே.. 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொடூர கொலை..!
திருமணத்திற்கு வந்திருந்த மூன்று வயது சிறுமியை பாலியல் சீண்டலுக்குள்ளாகி கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒய்எஸ்ஆர் கடப்பா மாவட்டம், மைலாவரம் மண்டலம், ஏ.கம்பலாதிண்ணை கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன், ஜம்மலமடகு மண்டலத்தில் உள்ள மொரகுடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்னை மணமகன் ஊரின் கிராமத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டார். வியாழக்கிழமை நடைபெற்ற இந்தத் திருமணத்திற்கு புரோதட்டூர் மண்டலத்தில் உள்ள அம்ருதநகர் கிராமத்தைச் சேர்ந்த பெற்றோர் தங்கள் மூன்று வயது மகளுடன் வந்தனர். இதனிடையே மொரகுடி கிராமத்தை சேர்ந்த ரஹ்மத்துல்லா (26) என்பவரும் திருமணத்தில் கலந்து கொண்டார். வியாழக்கிழமை இரவு தேவாலயத்தில் ரஹ்மத்துல்லா மூன்று வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
வெள்ளிக்கிழமை மதியம் திருமணத்திற்குப் பிறகு குழந்தை காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் பெற்றோர் உட்பட அனைவரும் குழந்தையை தேடத் தொடங்கினர். இதற்கிடையில், அனைவரும் ஏற்கனவே திருமண நிகழ்ச்சியில் இருந்தபோது, ரஹ்மத்துல்லாஹ் சிறுமியுடன் பேசி கொண்டே தேவாலயத்திற்குத் பின்னாள் அழைத்துச் சென்று 3 வயது சிறுமியின் வாயில் வாழைப்பழத்தை வைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் சிறுமியை கொடூரமாக அடித்துக் கொன்று, உடலை புதரில் வீசிச் சென்றான். பின்னர் எதுவும் நடக்காதது போல் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அதற்குள் சிறுமியைத் தேடிய பெற்றோர், ரஹமதுல்லாவின் சட்டையில் இரத்தக் கறைகளைக் கண்டு அவரைத் தடுத்து தங்கள் மகள் எங்கே என்று கேட்டபோது, அவர் அங்கிருந்து ஓட முயன்றார். இதனால் அங்கிருந்தவர்கள் பிடித்து தாக்கினர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.. 2 குழந்தைகளின் தந்தை வெறிச்செயல்..!
இதற்கிடையில், சிலர் தேவாலயத்தின் பின்னால் உள்ள புதர்களில் ஒரு சிறுமியின் உடலைக் கண்டுபிடித்தனர். தகவல் கிடைத்ததும், தலமஞ்சிப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ரஹ்மத்துல்லாவை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் போராட்டம் நடத்தினர். ரஹ்மத்துல்லாவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர்கள் கோரினர்.
குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இந்தக் கொடுமையைச் செய்ததாக குழந்தையின் தந்தை புகார் அளித்துள்ளார். ரஹ்மத்துல்லா பத்தாம் வகுப்பு வரை படித்து வேலைக்கு செல்லாமல் மதுவுக்கு அடிமையாகியதாகவும் அவரது தாயார் குவைத்தில் பணி புரியக்கூடிய நிலையில் தந்தை சிறு சிறு வேலைகள் செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். ரஹ்மத்துல்லா செய்த செயலை கண்ட அவரது குடும்பத்தினரும் அவரை சந்திக்க மறுத்துவிட்டனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அய்யய்யோ...மீண்டும் மீண்டுமா! டெல்லியில் வேகமெடுக்கும் கொரோனா... எத்தனை பேருக்கு பாதிப்பு தெரியுமா?