×
 

ஆதார் டு பாஸ்போர்ட் வரை... இன்று முதல் பல்வேறு கட்டணங்களில் அதிரடி மாற்றம்... முழு விவரம் இதோ...!

ஜூலை 1 முதல் பாஸ்போர்ட் கட்டண முதல் வங்கி சேவைகள் வரை பல்வேறு கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜூலை 1 முதல் நாடு முழுவதும் பல்வேறு புதிய விதிமுறைகள் மற்றும் கட்டண மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. பாஸ்போர்ட் கட்டண உயர்வு, சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை, 125 நாள் வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.

பாஸ்போர்ட் கட்டணம் உயர்வு:

14 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ்போர்ட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

  • 36 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
  • தட்கல் (Tatkal) முறையில் பெறுவதற்கான கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • 60 பக்கங்கள் கொண்ட சாதாரண பாஸ்போர்ட்டுக்கான கட்டணம் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தட்கல் முறையில் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான 36 பக்க பாஸ்போர்ட்டின் கட்டணம் ரூ.1,750 ஆகவும், தட்கல் முறையில் ரூ.4,250 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தொலைந்துபோன அல்லது சேதமடைந்த 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு மாற்றாக புதிய பாஸ்போர்ட் பெறுவதற்கான கட்டணம் ரூ.5,000-லிருந்து ரூ.7,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 60 பக்க பாஸ்போர்ட்டுக்கு ரூ.6,000-மும், தட்கல் முறையில் ரூ.8,500-மும் கட்டணமாக வசூலிக்கப்படும்.

ஆதார் – மின்னஞ்சல் இணைப்பு:

ஆதார் எண்ணுடன் மின்னஞ்சல் முகவரியை இணைக்க அல்லது மாற்ற வசூலிக்கப்பட்டு வந்த கட்டணம் ஜூலை 1 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ரூ.75 கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், இனி நேரடியாக மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு கட்டணம் இல்லை. இணையதளம் அல்லது சேவை மையங்கள் மூலம் செய்யப்படும் சேவைகளுக்கு வழக்கமான சேவைக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.

இதையும் படிங்க: குடியுரிமைக்கான இறுதி ஆதாரம் அல்ல பாஸ்போர்ட்..!! மத்திய அரசின் விளக்கம்..!!

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை: 

சிபிஎஸ்இ பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியை கட்டாயமாகப் படிக்க வேண்டும் என்ற மும்மொழிக் கொள்கை ஜூலை 1 முதல் அமலுக்கு வருகிறது.

125 நாள் வேலைவாய்ப்பு திட்டம்: 

100 நாள் வேலைத் திட்டத்திற்கு மாற்றாக, ஆண்டுக்கு 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் வி.பி.ஜி. ராம்ஜி திட்டம் ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்தத் திட்டத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நிதி வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கார் விலை உயர்வு: 

உற்பத்திச் செலவு மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளதை காரணமாகக் கொண்டு, Mercedes-Benz, BMW, Honda, Audi, Tata உள்ளிட்ட பல்வேறு கார் நிறுவனங்கள் ஜூலை 1 முதல் தங்களது வாகனங்களின் விலையை உயர்த்தியுள்ளன.

வங்கி சேவைகளில் மாற்றம்: 

எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கிகளின் குறிப்பிட்ட சில கிரெடிட்  கார்டு ஆன்லைன் பரிவர்த்தனைகள், ரிவார்ட்ஸ் பாயிண்ட்கள், விமான நிலைய லவுஞ்ச் (Airport Lounge) பயன்பாடு உள்ளிட்ட சேவைகளில் ஜூலை 1 முதல் புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

ரயில் பயண அபராதம் உயர்வு: 

ரயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான அபராதம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ரூ.250 ஆக இருந்த அபராதம், ஜூலை 1 முதல் ரூ.500 ஆக வசூலிக்கப்படும்.

மேலும், டிக்கெட் எடுத்த பயணிக்குப் பதிலாக வேறு ஒருவர் பயணம் செய்தால், அவர் பயணக் கட்டணத்துடன் ரூ.500 அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும்.

யூபிஐ மூலம் பி.எப். பணம் எடுக்கும் வசதி:

யூபிஐ (UPI) மூலமாக வருங்கால வைப்பு நிதி (PF) பணத்தை எடுக்கும் புதிய வசதி இந்த மாதத்தில் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்பிஜி மற்றும் சிஎன்ஜி விலை

கடந்த மாதம் எல்பிஜி சிலிண்டர் மற்றும் சிஎன்ஜி விலைகள் உயர்த்தப்பட்ட நிலையில், ஜூலை 1-ஆம் தேதியிலும் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் நடுத்தர வர்க்க மக்களிடையே நிலவி வருகிறது.

இதையும் படிங்க: காதலர்கள் சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்..! கைதாகிய 4 பேருக்கு நீதிமன்ற காவல்..! மயிலாடுதுறையில் பதற்றம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share