×
 

"வாய் கிழிய வெற்று வசனம்... அதிகார போதை"..! விளாசிய அதிமுக..!!

தமிழக வெற்றி கழகம் அதிகார போதையில் இருப்பதாக அதிமுக குற்றம் சாட்டி உள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அறிவித்த ஒரு முக்கிய திட்டமாக 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை' திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா சென்னையில் இன்று நடைபெற இருந்த நிலையில், முதலமைச்சரின் டெல்லி பயணம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் விஜய் பதவியேற்ற உடனேயே, மே 10 அன்று மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது. அவற்றில் ஒன்று இந்த 'சிங்கப்பெண்' திட்டம். தமிழக வெற்றி கழகம் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டை வருகின்றன.

இந்த நிலையில், ஆட்சி அதிகாரம் கைக்கு வந்து ஒரு மாதம் கூட முழுமையடையாத நிலையில், ஆளுங்கட்சியின் நிர்வாகிகள் அதிகாரபோதையில் தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோதச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளையே கட்டுப்படுத்த முடியாத 'பொய்க்கால் குதிரை' அரசின் முதல்வர், எட்டுக்கோடி மக்களின் பாதுகாப்பிற்கு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்? என்று கேள்வி எழுப்பி உள்ளது.

இதையும் படிங்க: எடப்பாடியை சந்திக்க முதல்வர் விஜய் நேரம் கேட்டாரா..? உண்மையைப் போட்டு உடைத்த அதிமுக..!

பெண்கள் பாதுகாப்பிற்காக 'சிங்கப்பெண் அதிரடிப்படை' அமைக்க உள்ளோம் என வாய்கிழிய வெற்று வசனங்களைப் பேசுவதை விடுத்து, அதல பாதாளத்தில் உள்ள சட்டம்-ஒழுங்கைச் சீர்படுத்தி, தமிழக மக்களின் பாதுகாப்பிற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயற்சியாவது செய்யுங்கள் எனத் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: கடலூர் அதிமுக அலுவலகம் சூறையாடல்..! அதிரடி திருப்பம்... முன்னாள் அமைச்சர் ஆதரவாளர்கள் பகீர் குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share