சர்வதேச விமான பயணிகளுக்கு குட் நியூஸ்! கட்டணத்தை குறைத்தது ஏர் இந்தியா!
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை குறைந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா நிறுவனம் வட அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் உள்ளிட்ட சர்வதேச வழித்தடங்களில் தனது எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அதிரடியாகக் குறைத்துள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் விமான எரிபொருள் விலை நாளுக்கு நாள் அசுர வேகத்தில் சரிந்து வருவதைத் தொடர்ந்து, விமானப் போக்குவரத்துத் துறையின் உள்கட்டமைப்பில் தற்பொழுது ஒரு மாபெரும் மகிழ்ச்சிகரமான மாற்றம் அரங்கேறியுள்ளது. இந்தியாவின் முன்னனி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா நிறுவனம், சர்வதேச வழித்தடங்களில் பயணம் செய்யும் தனது பயணிகளுக்குக் கட்டணக் குறைப்பு என்ற செய்தியை அறிவித்துள்ளது.
விமானக் கட்டணங்களின் முக்கிய அங்கமாகத் திகழக்கூடிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை ஏர் இந்தியா நிறுவனம் தற்பொழுது அதிரடியாகக் குறைத்துள்ளது. சர்வதேசச் சந்தையின் புள்ளிவிவர விபரங்களின்படி எரிபொருளின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதால், அந்தப் பொருளாதார லாபத்தை நேரடியாகப் பயணிகளுக்குக் கொண்டு சேர்க்கும் உன்னத உத்தியை ஏர் இந்தியா நிறுவனம் கையாண்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை சரிவின் பலனை ஏர் இந்தியா நிறுவனம் உடனடியாக வௌிப்படையாக அமல்படுத்தியுள்ளது பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அவர்கள் பெட்ரோல், டீசல் விலை குறித்துப் பேசிய சில மணி நேரங்களிலேயே, ஏர் இந்தியா நிறுவனம் தனது சர்வதேச விமானக் கட்டணங்களைக் குறைப்பதாக வௌியிட்டுள்ள இந்த சுறுசுறுப்பான அறிவிப்பு தற்பொழுது சமூக வலைத்தள பக்கங்களிலும் மாபெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பெட்ரோல் டீசல் விலை குறையுமா? மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அதிர்ச்சி விளக்கம்!
இதையும் படிங்க: இதற்காக நீங்கள் எனக்கு 'நன்றி' கூறலாம்! அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி ட்வீட்!