×
 

நக்சல் ஒழிப்பு படை வீரர்களுக்கு கவுரவம்.. வளர்ச்சிப் பாதையில் சத்தீஸ்கர் என அமித் ஷா பெருமிதம்.!

நக்சல் எதிர்ப்பு வேட்டையில் தீவிரமாக செயல்படும் மத்திய, மாநிலப்படை அதிகாரிகளை அமித் ஷா நேரில் சந்தித்து பாராட்டினார். அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

சத்தீஸ்கரில் நக்சல்களை ஒடுக்கும் பணி தீவிர கதியில் நடந்து வருகிறது. அடுத்த ஆண்டு மார்ச் இறுதிக்குள் நக்சல் இல்லாத தேசமாக உருவாக்க வேண்டும் என்ற இலக்கை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நிர்ணயித்துள்ளார். அதற்கு ஏற்றார் போல், சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையிலான மாநில அரசும் நக்சல்களை ஒடுக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறது.  அந்த வகையில், மத்திய துணை ராணுவப் படை மற்றும் மாநில சிறப்பு அதிரடிப்படையினர் சேர்ந்து பஸ்தர், நாராயண்பூர், ஜகதல்பூர், பீஜப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல் எதிர்ப்பு வேட்டையில் களம் இறங்கியுள்ளனர்.

சமீபத்தில் நக்சல் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவன் சுதாகர் சுட்டுக்கொல்லப்பட்டான். கடந்த மாதம் நக்சல் அமைப்பின் மூத்த தலைவன் பசவராஜு கொல்லப்பட்டான். அந்த வகையில், இந்த ஆண்டில் மட்டும் 186 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த ஓராண்டில் மட்டும் 403 நக்சலைட்கள் ஒடுக்கப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போலீசில் சரண் அடைந்து, தேசிய நீரோடையில் கலந்துள்ளனர். 

இதையும் படிங்க: மாஜி நக்சல்களுக்கு மாஸாக திருமணம்.. நேரில் சென்று வாழ்த்திய முதலமைச்சர்..!

இதனால், மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் பெருமளவு குறைந்துள்ளது. மத்திய - மாநில படைகள் இணைந்து மேற்கொண்ட ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கை மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வர் விஷ்ணு தேவ் சாய், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார். மாநிலத்தில் நக்சல்களை ஒடுக்கும் பணி குறித்து அவரிடம் விளக்கினார். இதையடுத்து, நக்சல் எதிர்ப்பு வேட்டையில் தீவிரமாக செயல்படும் மத்திய, மாநிலப்படை அதிகாரிகளை அமித் ஷா நேரில் சந்தித்து பாராட்டினார். 

அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இந்த வேட்டையில் ஈடுபட்டுள்ள வீரர்கள் அனைவரையும் சந்திக்க விரும்புவதாக கூறிய அமித் ஷா, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் தேசம் நக்சல்வாதத்தில் இருந்து முற்றிலும் விடுபடும் என நம்பிக்கை தெரிவித்தார்.  டில்லி பயணத்தை முடித்து ராய்ப்பூர் திரும்பிய முதல்வர் விஷ்ணு தேவ் சாய், பஸ்தர் பகுதிெயில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து விளக்கினார். 

மத்திய - மாநில படைகளின் முயற்சியால், நக்சல் பாதித்த பஸ்தர் மண்டலத்தில் அமைதி திரும்புகிறது. நாராயண்பூர், பீஜப்பூரிலும் மக்கள் மாற்றத்தை விரும்பினர். அரசின் தொடர் முயற்சியால், பல இடங்களில் அமைதியும், வளர்ச்சியும் சாத்தியப்பட்டுள்ளது. சுற்றுலா, விவசாயம் செழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகள் தற்போது வளர்ச்சிப்பாதையில் பயணிக்கின்றன என விஷ்ணு தேவ் சாய் கூறினார்.

இதையும் படிங்க: மோஸ்ட் வான்டெட் நக்சல் பசவராஜ் மரணம்..! மாவோயிஸ்ட் இல்லா இந்தியா.. சிறப்பு பார்வை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share