#BREAKING: குஜராத் துயரச்சம்பவம்! அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி.. கோர விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல்!!
ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 241 பயணிகள் உயிரிழந்த நிலையில் நிலைமை குறித்து ஆராய்வதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றுள்ளார் பிரதமர் மோடி.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து மதியம் 1:38 மணிக்கு 242 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் லண்டனுக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், ஏறக்குறைய 10 நிமிடங்களில், குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.
விமானம் போயிங் 787-8 ரகத்தைச் சேர்ந்தது. அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் நகருக்கு இயக்கப்பட்ட AI171 விமானம் மருத்துவர்கள் விடுதியில் விழுந்து நொறுங்கியது. இதனையடுத்து இந்தக் கோர விபத்து நடந்த இடத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆய்வு செய்ததுடன் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: பயாஸ்கோப் காட்டுகிறார் சூனாபானா பழனிச்சாமி.. வண்டி வண்டியாக கழுவி ஊற்றிய ஆர்.எஸ். பாரதி.!!
இந்த நிலையில் விபத்து தொடர்பான நிலைமை குறித்து ஆராய்வதற்காக குஜராத் மாநிலம் அகமதாபாத்திற்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கி இடத்தை நேரில் சென்று அவர் பார்வையிட உள்ளார். இந்த விமான விபத்தில் காயமடைந்தவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
பயணிகள் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே வெடித்து சிதறிய நிலையில் 242 பேரில் 241 பேரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்காக நிதி வழங்கிய பிரதமர் மோடி.. ஸ்டாலினிடம் மோடி சொன்ன சீக்ரெட்.. விளக்கிய ஸ்டாலின்!