15 நாட்களில் 2வது முறை... வெடித்துச் சிதறிய பட்டாசு ஆலை... 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி...!
ஆந்திராவில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் கோனசீமா மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து 6 பேர் பலி, 8 பேர் காயமடைந்தனர்.
ஆந்திரா மாநிலம் டாக்டர் அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் ராயாவரத்தில் ஸ்ரீ கணபதி பட்டாசு உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் தீபாவளி நெருங்கி வருவதால் பட்டாசு அதிக அளவில் தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தீடிரென தீ பிடித்து எரிய தொடங்கியது. அதில் இருந்து தப்பிக்கவும் தீயணை அணைக்க முயன்றும் முடியாத நிலையில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு மீட்பதற்குள் இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 8 பேர் காயமடைந்தனர்.
இதையும் படிங்க: ஜெய்ப்பூர்: மருத்துவமனை ICU-வில் திடீர் தீ விபத்து.. 6 பேர் உயிரிழந்த சோகம்..!!
காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநில உள்துறை அமைச்சர் வாங்கலபுடி அனிதா, அமைச்சர் அச்சம் நாயுடு ஆகியோரும் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 நாட்களில் கோனசீமா மாவட்டத்தில் நடந்த 2வது பட்டாசு ஆலை வெடி விபத்து இதுவாகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்குள் இருந்த பட்டாசுகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த தம்பதி பட்டாசு வெடித்து உயிரிழந்தனர்.
இதையும் படிங்க: தீமிதி திருவிழாவில் சோகம்... பெண்ணும் முதியவரும் நெருப்பில் விழுந்த பதைபதைக்கும் காட்சிகள்...!