×
 

கரூர் எலிக்கு கோவையில் வச்சிருக்கேன் பொறி!! செந்தில்பாலாஜிக்கு அண்ணாமலை வார்னிங்!!

''சட்ட சபை தேர்தலில் திமுகவின் முதல் தோல்வி கோவை தெற்கில் ஆரம்பித்து கோவை வடக்கு என சேப்பாக்கம் வரை செல்லும்,'' என, பாஜ அண்ணாமலை பேசினார்.

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து கண்ணப்ப நகரில் பிரசாரம் செய்த பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, தி.மு.க.வுக்கு எதிராக கடுமையான தாக்குதலைத் தொடுத்தார். 

அண்ணாமலை பேசுகையில், “சட்டசபைத் தேர்தலில் தி.மு.க.வின் முதல் தோல்வி கோவை தெற்கில் தொடங்கி, கோவை வடக்கு வழியாக சேப்பாக்கம் வரை செல்லும். தமிழக மக்கள் தி.மு.க. ஆட்சியைத் தூக்கி எறிய காத்திருக்கின்றனர். மாநிலம் முழுவதும் தேஜ (தேசிய ஜனநாயகக் கூட்டணி) அலை வீசுகிறது” என்று உறுதியாகக் கூறினார்.

தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் 8,008 படுகொலைகள், 2,080 கற்பழிப்பு சம்பவங்கள் மற்றும் 18,000 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளதாக அண்ணாமலை சுட்டிக்காட்டினார். “பெண்களுக்கு எதிரான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்க, இரும்புக்கரம் கொண்டு அடக்குவதாக முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஆனால் அந்த இரும்புக்கரம் துருப்பிடித்து நிற்கிறது” என்று விமர்சித்தார்.

இதையும் படிங்க: என்கிட்ட கோடி இல்லை!! ஆனா கொள்கை இருக்கு! என்னை நம்புங்க! ஏமாற்ற மாட்டேன் - சீமான் உருக்கம்!

செந்தில் பாலாஜியை “எலி” என்று அழைத்த அண்ணாமலை, “அவர் கோவை பொறியில் மாட்டியுள்ளார்” என்றார். அதிமுகவை பாராட்டிய அவர், “1977க்குப் பிறகு ஒரு கட்சி தனித்து ஆறு முறைக்கு மேல் ஆட்சி அமைத்திருந்தால் அது அதிமுகதான். இது அதிமுகவின் கோட்டை. தேஜ கூட்டணி இங்கு 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தி.மு.க.வின் ஊழல் பட்டியல் காங்கிரஸ் கட்சியிடம் இருப்பதால் தி.மு.க.வினர் காங்கிரஸ் பற்றி பேச மாட்டார்கள் என்றும் அண்ணாமலை குறிப்பிட்டார். பாஜகவும் அதிமுகவும் எளிமையான கட்சிகள் என்றும், சாமானிய மக்களும் தலைவராகலாம் என்ற தத்துவம் தேஜ கூட்டணியின் அடிப்படை என்றும் விளக்கினார்.

மேலும், “கருணாநிதி முதல்வரானவுடன் நாடு முழுவதும் சுரண்டி தனது குடும்பத்துக்கு நான்காவது தலைமுறை வரை தேவையான சொத்துக்களைச் சேர்த்தார். அண்ணா என்ற வார்த்தையை தி.மு.க.வினர் பயன்படுத்தவே கூடாது” என்று சாடினார். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது செந்தில் பாலாஜியை ஊழல்பேர்வழி என்று ஸ்டாலின் கூறியதை நினைவுகூர்ந்த அண்ணாமலை, “இப்போது அருமை சகோதரர் என்கிறார். காரணம் பெட்டி மாறியுள்ளது” என்றார்.

தி.மு.க. வேட்பாளர்கள் இங்கு டெபாசிட் கூட இழக்க நேரிடும் என்று எச்சரித்த அண்ணாமலை, தேஜ கூட்டணிக்கு வாக்கு அளித்து தமிழகத்தை மாற்ற வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: அதிமுக வேட்பாளர் தோற்க அமைச்சர் எ.வ.வேலு உள்ளடி வேலை!! பாமக நிர்வாகிகளிடம் ரகசிய டீலிங்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share