×
 

நஞ்சற்ற விவசாயம்... உலக சந்தையை குறிவைக்கும் தமிழக அரசு..! பட்ஜெட் அறிவிப்புகள்..!!

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

500 நடுத்தர பால் பண்ணைகள் அமைக்க 25 சதவீதம் மூலதன மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விளைச்சலை தாண்டி வருமானமே இழக்கு என்றும் 5.20 கோடி ரூபாய் விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையத்துக்கு ஒதுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூலதன கடன் வழங்கும் நடவடிக்கையாக உழவர்களுக்கு குறுகிய கால கடன் பெறுவதற்கு 3000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2026 - 27 நிதியாண்டில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க 17,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த சிறு குறு விவசாயிகள் உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20% கூடுதல் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரியசக்தி பட்டு சித்தர்கள் 300 ஆழ்துளை கிணறுகளுக்கு நூறு சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதும் ஐந்து விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்றும் பதினாறு லட்ச ரூபாய் கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

24 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் வழங்க 227.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 57 ஆயிரம் மெட்ரிக் டன் தேனிக்கும் வகையில் வெங்காயம் சேமிப்பு பெறகு அமைப்பதற்காக கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தென்னை டானிக், பூச்சி நோய்களை உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவைக்காக தென்னை சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஜாக்பாட்..! களமிறங்கிய AI..!! வேளாண் பட்ஜெட்டில் செம்ம ட்விஸ்ட்..!!

கரூர் முதலைப்பட்டியில் தென்னை நாற்றுப்பண்ணை 48 லட்சத்தில் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்னெறி சாகுபடி, நஞ்சற்ற உற்பத்தி, உலகளாவிய ஏற்றுமதிக்காக வேளாண் பட்ஜெட்டில் 8.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: 100% பயிர் காப்பீடு... மண் முதல் மகசூல் வரை..! வேளாண் பட்ஜெட்டில் மாஸ் அறிவிப்புகள்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share