×
 

பெங்களூரில் 11 பேர் மரணத்தில் நடந்தது இதுதான்! ராகுல்காந்தியிடம் சித்தராமையா, சிவக்குமார் விளக்கம்..!

டெல்லி சென்றுள்ள கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, காங்கிரஸ் எம்.பி., ராகுல்காந்தியை சந்தித்து பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.

சமீபத்தில் நடந்த பிரீமியர் லீக் தாெடரில் ஆர்சிபி அணி கோப்பை வென்றது. அதற்கான வெற்றி கொண்டாட்டம், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்தது. 35 ஆயிரம் பேர் மட்டுமே அமரக்கூடிய அளவுள்ள அந்த மைதானத்தில் 3 லட்சம் பேர் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசின் சரியான திட்டமிடாத செயலே உயிரிழப்புக்கு காரணம் என, எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். 

கர்நாடகா ஐகோர்ட் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதில், அரசின் மீது எந்த தவறும் இல்லை என, முதல்வர் சித்தராமையாவும், துணை முதல்வர் சிவகுமாரும் மாறி மாறி கருத்து தெரிவித்தனர். இந்த நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில், பிரபல பத்திரிக்கையாளர் ராஜ்தீப் பேசுகையில், சித்தராமையா, சிவகுமார் இடையிலா அதிகாரப்போட்டியே பெங்களூரு சம்பவத்திற்கு காரணம் என கூறியது பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது. 

இதையும் படிங்க: பீகார் தேர்தலில் முறைகேடு..? தேர்தல் கமிஷனுடன் மல்லுக்கட்டும் ராகுல்காந்தி!

நம் நாட்டில் இரு வகையில் முதல்வர்கள் உள்ளனர். மோடி, மம்தா, நவீன் பட்நாயக், யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் முதல் வகையை சேர்ந்தவர்கள். அவர்கள் என்ன நினைக்கிறார்களோ அதைத் தான் செய்து முடிப்பார்கள். இன்றாவது வகை, பல தலைவர்களின் கீழ் நடக்கும் ஆட்சி. கர்நாடகாவில் தற்போது இரண்டாவது வகை ஆட்சி தான் நடக்கிறது. அங்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகிய இருவர் இடையே அதிகாரப்போட்டி நிகழ்கிறது. 

ஆர்சிபி என்பது பிரைவேட் பிரான்சைசி. இது இந்திய அணி கூட கிடையாது. ஆனால் அந்த அணியின் வெற்றியில் கர்நாடக அரசு உரிமை கொண்டாட நினைத்தது. சிவகுமார், சித்தராமையா இரு தரப்பினரும் வெற்றியில் உரிமை கொண்டாடினர். சிவக்குமார் ஏர்போர்ட் வரை சென்று வீரர்களை வரவேற்றார். சித்தராமையாவும் கிரிக்கெட் வீரர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்பினார். 

இவ்வளவு குறைவான நேரத்தில் வந்த உத்தரவால், கூட்டத்தை எங்களால் கையாள முடியவில்லை என பெங்களூரு போலீசார் கூறுகின்றனர்.  ஸ்டேடியத்திற்கு முதலில் வருபவருக்கு முன்னிரிமை என்ற அறிவிப்பும் மிகப் பெரிய பிரச்னைக்கு காரணமானது. அரசியல் தலைமை எப்போது பலவீனம் அடைகிறதோ, பிளவுபடுகிறதோ அங்கு அனைத்து பிரச்னைகளும், குழப்பங்களும் ஏற்படும்.  இந்த விவகராத்தில் போலீஸ் உயர் அதிகாரி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.

இன்னும் கொஞ்ச நாளில் இதற்கு சிவகுமார் தரப்பு தான் காரணம் எனவும், சித்தராமையா தரப்பு தான் காரணம் எனவும் இரு தரப்பில் மாறி மாறி புகார் எழுப்புவர். 

இந்த நிகழ்ச்சிக்கு சிவகுமார் தான்  அனுமதி வழங்கியதாக சித்தராமையா தரப்பு கூறியது. சித்தராமையாவின் அரசியல் செயலாளர் தான் அனுமதி வழங்கிதாக சிவக்குமார் தரப்பு கூறியது. சித்தராமையா ஒரு நிகழ்ச்சியை தலைமை தாங்கினால், அதே சமயம் சிவகுமார் மற்றொரு நிகழ்ச்சியை தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியானது. இப்படிப்பட்ட தருணத்தில் போலீஸ் கமிஷனர் என்ன செய்வார்? 

நிகழ்ச்சிக்கு தலைமை தாங்குவதில் கூட அதிகாரப்போட்டி நிலவுகிறது. இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி வழங்கவில்லை என கமிஷனர் தயானந்த் கூறுகிறார். மொத்தத்தில் கர்நாடக காங்கிரசில் நிகழ்ந்த அதிகாரப்போட்டியே ஒட்டுமொத்த பிரச்னைக்கு காரணமாக அமைந்தது என ராஜ்தீப் கூறினார். ராஜ்தீப்பின் இந்த கருத்து கர்நாடக மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இச்சம்பவத்தால், தேசிய அளவில் காங்கிரஸ் மீது அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் சிவகுமார் மீது அதிருப்தி அடைந்தனர். கட்சி மேலிடம் உத்தரவின் பேரில், விளக்கம் அளிக்க முதலமைச்சர் சித்தராமையா, இன்று டில்லி வந்தார். அவர் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தியை சந்தித்து கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் உடன் இருந்தார்.

இதையும் படிங்க: ராகுல்காந்தியா? சசி தரூரா? யார் சொல்வது பொய்.. பற்ற வைத்து ரசிக்கும் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share