×
 

லாலு வழக்கை ரத்து செய்ய முடியாது! வேலைக்கு நிலம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சிபிஐ குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய லாலு பிரசாத் யாதவ் விடுத்த கோரிக்கை நிராகரிப்பு; சட்டச் சிக்கலில் ஆர்ஜேடி குடும்பம்!

பீகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள (RJD) தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான 'வேலைக்கு நிலம்' (Land for Jobs) ஊழல் வழக்கை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் இன்று திட்டவட்டமாக மறுத்துவிட்டது. சிபிஐ தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (FIR) மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்யக் கோரி லாலு தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2004 முதல் 2009 வரை லாலு பிரசாத் யாதவ் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசில் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தார். அந்த காலகட்டத்தில் ரயில்வேயில் குரூப்-டி பணிகளைப் பெறுவதற்கு ஈடாக, தகுதியற்ற நபர்களிடமிருந்து லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் பெயரில் மிகக் குறைந்த விலையில் நிலங்கள் லஞ்சமாகப் பெறப்பட்டதாகச் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த ஊழலில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி மற்றும் மகன் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோருக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி லாலு பிரசாத் யாதவ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதாகத் தெரிகிறது, எனவே விசாரணையின் தொடக்க நிலையிலேயே எப்.ஐ.ஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் அமர்வு அதிரடியாகத் தெரிவித்தது. அதே சமயம், லாலு பிரசாத் யாதவின் வயது மூப்பு மற்றும் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, நீதிமன்ற விசாரணையில் அவர் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: பீகாரில் சோக சம்பவம்: அம்மன் கோவிலில் கடும் கூட்ட நெரிசல்..!! 8 பெண் பக்தர்கள் பரிதாப பலி..!!

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கின் விசாரணை இனி வேகம் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறையும் (ED) இதில் உள்ள பணப்பரிமாற்றம் குறித்துத் தனி விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல் 2026: 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!! பீகார், ஒடிசா, அரியானாவில் மட்டும் போட்டி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share