பரபரக்கும் தேர்தல் களம்... பீகார் வாக்கு எண்ணிக்கை தீவிரம்! தேஜஸ்வி முன்னிலை...!
இந்தியா கூட்டணி சார்பில் பீகார் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகித்து வருகிறார்.
பீகார் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட பீகாரில் தேர்தல் முடிவுகள் நவம்பர் 14 தேதி அன்று வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பீகார் தேர்தல் அறிவிக்கப்பட்டது. வாக்காளர் திருத்தப்பட்டியல் விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில், பீகார் தேர்தல் களம் சூடு பிடித்தது. தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பீஹார் முதலமைச்சராக இருந்தார். இவர் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வந்தார். இதனிடையே, பீகார் மாநில சட்டசபை தேர்தலில் இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணியின் சார்பில் போட்டியிடும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் முன்னிலை வகித்து வருகிறார்.
இதையும் படிங்க: டெல்லியை அடுத்து தெலங்கானாவிலும் சதியா?... ரயில் நிலையம் அருகே நின்ற மர்ம கார்... சமீருக்கு வலைவீச்சு...!
ராகோபூர் தொகுதியில் போட்டியிட்ட தேஜஸ்வி யாதவ் முன்னிலையில் உள்ளார். பாஜக 154 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளிலும் ஜன் சுராஜ் கட்சி மூன்று தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது. பெரும்பான்மைக்கு 122 இடங்கள் தேவை என்ற நிலையில் 154 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.
இதையும் படிங்க: போட்றா வெடிய...!! பீகார் தேர்தலில் செஞ்சூரி விளாசிய பாஜக... வரலாறு காணாத முன்னிலை...!