#BREAKING: நக்ரோடா தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி...! கொண்டாட்டம்..!
ஜம்மு காஷ்மீரில் உள்ள நாக்ரோடா தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி உள்ளது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார்.
இதையும் படிங்க: #BREAKING: போட்றா வெடிய... பீகாரில் தனிப் பெரும் கட்சியாக உருவெடுக்கிறது பாஜக...!
இன்று பீகார் தேர்தல் முடிவு வெளியாக உள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தலில் 2 கட்டங்களாகப் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அதுமட்டுமல்லாது பீகாரில் நடந்த இடைத்தேர்தல்கள் முடிவுகளும் என்று வெளியாக உள்ளன. இடைத்தேர்தலுக்கு பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன.
ஜம்மு & காஷ்மீர்: Budgam, Nagrota
ராஜஸ்தான்: Anta
ஜார்கண்ட்: Ghatshila
தெலுங்கானா: Jubilee Hills
பஞ்சாப்: Tarn Taran
மிசோரம்: Dampa
ஒடிஷா: Nuapada ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடந்தன. ஜம்மு காஷ்மீரில் உள்ள நாக்ரோடா தொகுதி இடைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பாஜக சார்பில் போட்டியிட்ட தேவ்யானி ராணா வெற்றி பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: 170 தொகுதிகளில் சொல்லி அடிப்போம்... நாங்க தான் கிங்... பாஜக செய்தி தொடர்பாளர் உறுதி...!