×
 

போயிங் ரக விமானங்களுக்கு செக்.. TOP டூ BOTTOM ஆய்வு செய்ய டிஜிசிஏ அதிரடி உத்தரவு..!

ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானங்களை ஆய்வுக்கு உட்படுத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்தில் சிக்கி நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 240 பயணிகள் உட்பட மாணவர் விடுதியில் விமானம் விழுந்ததில் அங்கிருந்த மாணவர்களும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் விமானங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அதன்படி, ஏர் இந்தியாவின் போயிங் ரக விமானங்களை ஆய்வு செய்ய விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து விமானம் புறப்படுவதற்கு முன் ஒரு முறை சோதனை நடத்த வேண்டும்., எரிபொருள் அளவுரு கண்காணிப்பு மற்றும் தொடர்புடைய அமைப்பு சோதனைகளை ஆய்வு செய்ய வேண்டும் கேபின் மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும், மின்னணு இயந்திர கட்டுப்பாட்டு அமைப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: விமான விபத்துக்கு காரணம்.. மீட்கப்பட்ட கருப்புப்பெட்டி சொல்லும் உண்மைகள்!

மேலும், இயந்திர எரிபொருள் இயக்கப்படும் ஆக்சுவேட்டர்-செயல்பாட்டு சோதனை மற்றும் எண்ணெய் அமைப்பு சோதனை.,ஹைட்ராலிக் அமைப்பின் சேவைத்திறன் சோதனை., டேக்-ஆஃப் அளவுருக்களின் மதிப்பாய்வு., மறு அறிவிப்பு வரும் வரை போக்குவரத்து பரிசோதனையில் விமானக் கட்டுப்பாட்டு ஆய்வு அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் மின் உறுதி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் B787-8/9 விமானங்களில் கடந்த 15 நாட்களில் மீண்டும் மீண்டும் ஏற்பட்ட கோளாறுகளை மதிப்பாய்வு செய்ததன் அடிப்படையில் பராமரிப்பு நடவடிக்கைகளை விரைவில் மூடுவது ஆகியவற்றின் சோதனை அறிக்கைகளை DGCA க்கு மதிப்பாய்வுக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "உனக்கு ஆயுசு கெட்டிப்பா".. மரணத்தை வென்றவருடன் பிரதமர் மோடி சந்திப்பு!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share