×
 

வெடிகுண்டு மிரட்டலுக்கு மைக்ரோசாப்ட் பயன்பாடு... தரவுகளை தர மறுக்கும் நிறுவனம்?

வெடிகுண்டு மிரட்டலுக்கு 95 சதவீதம் மைக்ரோசாப்ட் இ மெயில் பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

அண்மைக் காலங்களில் இந்தியாவில் வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளிடையே பெரும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் விமான நிலையங்கள், விமானங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் முக்கிய பொது இடங்களை குறிவைத்து விடுக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியை குலைப்பதோடு, பொருளாதார மற்றும் நிர்வாக ரீதியாக பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. 

இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் போலியானவையாக இருந்தாலும், ஒவ்வொரு மிரட்டலையும் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அதிகாரிகள் உள்ளனர். இதனால், ஒவ்வொரு முறையும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் பாதுகாப்பு படைகள் உடனடியாக சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இவை பெரும்பாலும் புரளிகளாக முடிவடைந்தாலும், இத்தகைய சம்பவங்கள் பொதுமக்களிடையே பயத்தை உருவாக்குவதோடு, பயணத் தாமதங்கள், பொருளாதார இழப்புகள் மற்றும் நிர்வாக சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.

பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், அரசியல்வாதிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் நிலையில், மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. அரசியல் தலைவர்களின் வீடுகள், நீதிமன்றங்கள் என பல இடங்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்க மைக்ரோசாப்ட் பெருமளவில் பயன்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்று IT நிறுவனங்கள் டார்கெட்..!! தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் அலறும் சென்னை..!!

95 சதவிகிதம் வெடிகுண்டு மிரட்டல்கள் மைக்ரோசாப்ட் இமெயில் மூலமே வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வெடிகுண்டு மிரட்டல் வெடுக்கும் நபர்களின் தரவுகளை தர மைக்ரோசாஃப்ட் நிறுவனம் மறுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க: முடிச்சு விட்டாய்ங்க... விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை தட்டித் தூக்கிய போலீஸ்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share