×
 

ஏர் இந்தியாவிற்கு வந்த அடுத்த சோதனை.. பாம் இருப்பதாக வந்த மிரட்டல்.. பரபரப்பான தாய்லாந்து ஏர்போர்ட்..!

தாய்லாந்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில், மருத்துவக்கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த பயணி உள்ளிட்டோர் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று அகமதாபாத் சென்ற பிரதமர் மோடி இந்த கோர விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரதமர் மோடி விபத்துக்கான காரணம் என்ன, எப்படி நிகழ்ந்தது, தற்போது உள்ள நிலைமை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: அப்ப சேலம்.. இப்போ சென்னை.. எடப்பாடி பழனிசாமிக்கு சோதனை மேல் சோதனை..!

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தின் சோகமே இன்னும் ஓயாத நிலையில், ஏர் இந்தியா விமானத்திற்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. தாய்லாந்தின் பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு இன்று காலை 8 மணியளவில் (இந்திய நேரப்படி) புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 156 பயணிகள் பயணம் செய்தனர். இதனிடையே பூகெட் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள குளியலறை ஒன்றின் சுவரில், டெல்லி சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த மிரட்டல் குறித்து விமான பைலட்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து பாதுகாப்புப் பணியாளர்கள் 156 பயணிகள் மற்றும் பணியாளர்களை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் சென்றனர். 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள், விமானத்தில் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில், விமானத்தில் எந்த வெடி குண்டும் இல்லை எனவும் அது வெறும் புரளி எனவும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் விமானத்தில் பயணித்த 156 பயணிகளிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. மேலும் விமான நிலையமே பரபரப்பாக காணப்பட்டது. 

இதையும் படிங்க: இது 19வது முறை..! அண்ணா பல்கலை.க்கு வெடிகுண்டு மிரட்டல்.. சோதனை தீவிரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share