×
 

இதுதான் லாஸ்ட் சான்ஸ்!! இந்தியா வர முடியுமா? முடியாதா? விஜய் மல்லையாவுக்கு கெடு விதித்த ஐகோர்ட்!!

மல்லையா முதலில் நாடு திரும்ப வேண்டும். இல்லாவிட்டால் இந்த மனுவை நிராகரிப்போம். அத்துடன் நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் தவிர்த்து விட்டீர்கள் என பதிவு செய்ய நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.

தொழில் அதிபர் விஜய் மல்லையாவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அவர் முதலில் இந்தியாவுக்கு திரும்ப வேண்டும். இல்லையெனில் அவரது மனுக்களை நிராகரிக்க நேரிடும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மல்லையா மீது இந்திய வங்கிகளில் சுமார் 9,000 கோடி ரூபாய் கடன் திருப்பி செலுத்தாமல் மோசடி செய்த வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2016ஆம் ஆண்டு பிரிட்டனுக்கு தப்பிச் சென்ற மல்லையா, 2019இல் மத்திய அரசால் 'தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளி' (Fugitive Economic Offender) என அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பை எதிர்த்தும், தப்பி ஓடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டத்தின் (FEO Act) சில பிரிவுகளை சவால் செய்தும் மும்பை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை அவர் தாக்கல் செய்திருந்தார்.

கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், மல்லையா நாடு திரும்பினால் மட்டுமே விசாரணை நடத்த முடியும் என உத்தரவிட்டது. ஆனால் அவர் பிரிட்டனிலேயே தங்கியிருந்தார். இந்நிலையில், பிப்ரவரி 12ஆம் தேதி (நேற்று) மீண்டும் விசாரணை நடைபெற்றது.

இதையும் படிங்க: காலையிலேயே இன்ப அதிர்ச்சி... முதல்வரின் WOW அறிவிப்பு... கூட்டணி கட்சிகள் வரவேற்பு..!

தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகர் மற்றும் நீதிபதி கவுதம் அங்கத் அடங்கிய அமர்வு, "மல்லையா முதலில் நாடு திரும்ப வேண்டும். இல்லையெனில் மனுவை நிராகரிப்போம். நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து விட்டீர்கள் என பதிவு செய்ய வேண்டியிருக்கும்" என எச்சரித்தது.

நீதிபதிகள் மேலும் கூறியதாவது: "சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி, அதே சட்டத்தின் மூலம் சலுகை எதிர்பார்க்க கூடாது. கருணையால் இன்னொரு வாய்ப்பு தருகிறோம். வரும் பிப்ரவரி 18ஆம் தேதிக்குள் நாடு திரும்ப முடியுமா, முடியாதா என்பதை பிரமாண பத்திரம் மூலம் தெளிவுபடுத்த வேண்டும்."

மல்லையா 2016 முதல் பிரிட்டனில் தங்கியுள்ளார். அவரது கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலானதால் வங்கிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்திய அரசு அவரை நாடு திரும்பச் செய்ய பிரிட்டனுடன் எக்ஸ்ட்ராடிஷன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த எச்சரிக்கை மல்லையாவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் நாடு திரும்புவாரா அல்லது மனு நிராகரிக்கப்படுமா என்பது அடுத்த வார விசாரணையில் தெரிய வரும். பொதுமக்களிடையே இது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 2 நாள் பயணம்!! இன்று தமிழகம் வருகிறார் அமித்ஷா!! திருச்சி பாஜகவினர் உற்சாகம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share