×
 

மக்களை ஏமாத்துறாங்க! இது பைத்தியக்காரத்தனம்! அரியானா வாக்களர் பட்டியல்! கொந்தளிக்கும் பிரேசில் மாடல்!

இந்தியாவில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தி மோசடி செய்கிறார்களா? என பிரேசில் மாடல் அழகி லாரிசா தனது ஆதங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் 25 லட்சம் போலி வாக்காளர்கள் இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியது இந்திய அரசியலில் பெரும் புயலை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் குற்றச்சாட்டின் மையத்தில் நிற்கும் ஒரு பிரேசில் மாடலின் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி, கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூகுளில் தேடியுள்ளனர். 

அந்த மாடல், லாரிசா நேரி (Larissa Nery) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். தனது பழைய புகைப்படத்தை இந்தியாவில் மோசடிக்கப் பயன்படுத்தியதற்கு அதிர்ச்சி தெரிவித்த லாரிசா, "என்னை இந்தியனாகக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது பைத்தியக்காரத்தனம். நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தச் சம்பவம், தேர்தல் முறைகேடுகள் குறித்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

ராகுல் காந்தி நவம்பர் 5 அன்று டெல்லியில் நடத்திய நிருபர் சந்திப்பில், "எச்-ஃபைல்ஸ்" என்று அழைத்த ஆவணங்களை வெளியிட்டார். அவர் கூறுகையில், ஹரியானா வாக்காளர் பட்டியலில் 25,41,144 போலி வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 5,21,619 போலி, 93,174 தவறான முகவரிகள், 19,26,351 கும்பல் வாக்காளர்கள் என ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளன. 

இதையும் படிங்க: நாட்டை அவமதிக்கும் முயற்சி! இந்தியாவுக்கு எதிரான ராகுல்காந்தியின் விளையாட்டு!

குறிப்பாக, ராய் சட்டசபைத் தொகுதியில் 10 வாக்குச்சாவடிகளில் 22 தடவை ஒரே புகைப்படம் - சீமா, ஸ்வீட்டி, சரஸ்வதி, லக்ஷ்மி போன்ற வெவ்வேறு பெயர்களுடன் - பயன்படுத்தப்பட்டதாகக் காட்டினார். அந்தப் புகைப்படம், பிரேசில் மாடல் ஒருவரின் என்று அவர் கூறினார். இது தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) மற்றும் பாஜகவின் "ஓபரேஷன் சர்கார் சோரி" என்ற சதியின் சான்று என்று ராகுல் வலியுறுத்தினார். இதனால், காங்கிரஸ் வெற்றி பெற வேண்டிய இடத்தில் தோல்வியடைந்ததாக அவர் கூறினார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்து சமூக வலைதளங்களில் தேடிய பலர், அது பிரேசில் மாடல் லாரிசா நேரியின் என்று அறிந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் "பிரேசில் மாடல் ஹரியானா வாக்காளர்" என்ற தேடல் 10 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகியுள்ளது. 

லாரிசா, இப்போது குழந்தைகளுடன் பணியாற்றும் ஒரு ஹேர்ட்ரெசர். அவர் 2017-ல் பிரேசில் ஃபோட்டோகிராஃபர் மதேஸ் ஃபெர்ரெரோவால் எடுக்கப்பட்ட ஸ்டாக் புகைப்படம் (அன்லைன் ரிசர்வாரியில் இருந்து) இதில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் போலி சுயமரியாதைக்கும் பயன்பட்டது. ராகுலின் குற்றச்சாட்டுக்குப் பிறகு, அந்தப் புகைப்படம் அன்ஸ்ப்ளாஷ் போன்ற தளங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

லாரிசா, தனது X (ட்விட்டர்) கணக்கில் போர்ச்சுகீஸ் மொழியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்தார். "நண்பர்களே, உங்களுக்கு ஒரு ஜோக் சொல்லப் போகிறேன். அவர்கள் என் பழைய புகைப்படத்தைப் பயன்படுத்துகிறார்கள். நான் 18-20 வயதாக இருந்தபோது எடுக்கப்பட்டது. இது இந்தியாவில் தேர்தல், ஓட்டு சம்பந்தமானது போல் தெரிகிறது. என்னை இந்தியனாகக் காட்டி மக்களை ஏமாற்றுகிறார்கள். இது என்ன பைத்தியம்தான்? நாம் எந்த உலகில் வாழ்கிறோம்?" என்று அதிர்ச்சியுடன் கூறினார். 

அவர் சிரித்தபடி, "நமஸ்தே தவிர வேறு இந்தி சொற்களை கற்றுக்கொள்ள வேண்டும். இப்போது இந்தியாவில் பிரபலமாகிவிட்டேன்" என்றும் சொன்னார். இந்த வீடியோ வைரலாகி, ராகுலின் குற்றச்சாட்டுக்கு புதிய அளவிலான கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: SIR-னாலே திமுகவுக்கு அலர்ஜி!! ஸ்டாலினுக்கு பயம் வந்திருச்சி!! நைனார் கிண்டல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share