செத்துட்டேன்னு தான் நினைச்சேன்! உயிர் பிழைச்சதை நம்ப முடியல! மவுனம் கலைத்தார் விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்..
எல்லாம் என் கண் முன்னே நடந்தது; நான் உயிருடன் தப்பித்ததை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை'' என ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தெரிவித்தார்.
குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து நேற்று லண்டனுக்கு டேக் ஆப் ஆன ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில், மருத்துவக்கல்லூரி கட்டடம் மீது விழுந்து வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த 242 பேரில், ஒருவரை தவிர 241 பேர் இறந்தனர். விமானம் விழுந்த கட்டடத்தில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்த மருத்துவ மாணவர்கள் பலரும் உடல் கருகினர். இதனால், பலி எண்ணிக்கை 265 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்த பயணி உள்ளிட்டோர் ஆமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு உள்ளிட்ட அமைச்சர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர், விபத்து மற்றும் மீட்பு பணிகள் பற்றி பிரதமர் மோடி கேட்டறிந்தார். ஆமதாபாத் மருத்துவமனைக்கு சென்ற பிரதமர் மோடி, விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.
இதையும் படிங்க: கற்பனை செய்ய முடியாத துயரம்! இதயத்தை உடைக்கும் வலி.. நொறுங்கிப் போன பிரதமர் மோடி..!
அதன்பிறகு, விமான விபத்தில் உயிர் தப்பிய விஸ்வாஸ் குமார் தனது திகில் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது: விமானம் புறப்படத் தொடங்கியபோதே பிரச்னை ஏற்பட்டது. திடீரென விளக்குகள் எரிந்தன. உடனே விமானம் வேகமாக இயங்கத் தொடங்கியது. அப்போதுதான் அது விழுந்தது. உடைந்து எரியத் தொடங்கியது. எனது இருக்கை இருந்த பக்கம் நல்லவேளையாக காலி தரைப் பகுதி இருந்தது.
விடுதியில் விமானம் மோதிய பக்கம் நான் அமரவில்லை. இது தான் நான் தப்பிக்க உதவியது. சீட் உடைந்து தனியாக வந்ததால் அவசர வழி வழியாக உயிர் தப்பினேன். புறப்பட்ட 30 விநாடிகளில் பெரும் சத்தத்துடன் விமானம் விழுந்து நொறுங்கியது. விமானத்தில் என்னைச் சுற்றிலும் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஒரு பக்க அவசர வழி சேதமடைந்த நிலையில், மறுபக்க அவசர வழி வழியாக வெளியேறினேன்.
எனது இடது கையில் தீப்பிடித்தது. உரிய நேரத்தில் மீட்பு படையினர் என்னை மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினர். விமானம் விழுந்த பகுதியின் எதிர் பக்கத்தில் சுவர் இருந்ததால் யாரும் தப்பிக்க முடியவில்லை. நான் அமர்ந்திருந்த பகுதியில் மட்டுமே தப்பிக்க இடம் இருந்தது. உயிர் பிழைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் விழுந்த இடம் விடுதியின் தரைப்பகுதி. என் கண்முன்னே விமான பணி பெண்கள் மற்றும் பயணிகள் உயிரிழந்த சம்பவங்கள் நிகழ்ந்தது.
என் கண் முன்னே அனைத்து துயர சம்பவங்களும் நிகழ்ந்தது. விபத்து குறித்து பிரதமர் மோடி என்னிடம் கேட்டறிந்தார். நானும் இறந்திருப்பேன் என்றே நினைத்தேன் என கூறினார். அது மட்டுமல்ல, அந்த விமானம் கீழே விழுந்து நொறுங்கிய அடுத்த நிமிடமே, அதிலிருந்து வெளியே வந்த விஸ்வாஸ் குமார், தனது பாக்கெட்டில் இருந்த செல்போனை எடுத்து, தனது தந்தைக்கு போன் செய்து, விமானம் விபத்துக்குள்ளானதாகவும், தான் உயிர் பிழைத்துவிட்டேன் என்றும் கூறியிருந்ததாக அவரது உறிவனர் நயன் குமார் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: என் ரத்தம் கொதிக்குது..! கனவுல கூட நினைச்சிருக்க மாட்டாங்க.. குஜராத்தில் மோடி ஆவேசம்..!