×
 

வெளியானது 4 மாநில இடைத்தேர்தல் ரிசல்ட்.. காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங். வெற்றி.. கொண்டாட்டத்தில் ஆம் ஆத்மி..!

குஜராத்தின் காடி தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் பாஜ வேட்பாளர் ராஜேந்திர சாவ்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிஃபா அகமது வெற்றி பெற்றுள்ளார்.

கேரளாவின் நிலம்பூர் தொகுதி, மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதி, பஞ்சாபின் லூதியான மேற்கு தொகுதி, குஜராத்தின் விசவதார் மற்றும் காடி தொகுதிகளுக்கு கடந்த ஜூன் 19ம் தேதி இடைத் தேர்தல்கள் நடந்தன. இன்று ஓட்டு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியாகின.

கேரளாவின் நிலம்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆர்யதன் ஷூகாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை விடவும் 11 ஆயிரத்து 77 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.  சுயேட்சை வேட்பாளர் ஒருவர் 3வது இடம் பிடித்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பாஜ வேட்பாளருக்கு 4வது இடம் கிடைத்தது.

பஞ்சாபின் லூதியான மேற்கு தொகுதியில் தற்போதைய ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் அரோரா காங்கிரஸ் வேட்பாளர் பாரத் பூஷன் அஷூ-வை தோற்கடித்தார். குஜராத்தின் விசாவதர் தொகுதியில் 2007க்கு பிறகு பாரதிய ஜனதா வெற்றி பெறவில்லை. அதனால் இந்த இடைத் தேர்தலில் வெற்றிபெற பாஜ முயற்சித்தது. அந்தக் கட்சி சார்பில் கீர்த்தி பட்டேல் வேட்பாளராக களமிறங்கினார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் கோபால் இதாலியா போட்டியிட்டார்.

இதையும் படிங்க: நீட் மோசடி... எஜமான்கள் கிட்ட பம்மி கிடக்குது ADMK ! முதல்வர் காட்டம்

ஏற்கனவே இந்த தொகுதியில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று இருந்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பூபேந்திர பயானி பதவியை ராஜினாமா செய்து, பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டதால் இடை தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் 17 ஆயிரத்து 554 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இந்த முறையும் பாஜ கனவு நிறைவேறவில்லை.  அந்தக் கட்சி 2வது இடமும், காங்கிரஸ் 3வது இடத்தையும் பிடித்தன.  

குஜராத்தின் காடி தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் பாஜ வேட்பாளர் ராஜேந்திர சாவ்தா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தின் கலிகஞ்ச் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் அலிஃபா அகமது வெற்றி பெற்றுள்ளார்.  பாஜ வேட்பாளரை விட 50 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகளை அவர் பெற்றார்.

தேர்தல் நடந்த 5 தொகுதிகளின் இடைத் தேர்தல்களில் ஒரு இடத்தில் மட்டுமே பாரதிய ஜனதா வெற்றிபெற்றுள்ளது.  ஆம் ஆத்மி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. பஞ்சாபின் லூதியான மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற ராஜ்யசபா எம்.பி. சஞ்சய் அரோரா, எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். அந்த இடத்துக்கு தான் போட்டியிடவில்லை என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது; 

குஜராத் மக்கள் பாஜ மீது வெறுப்படைந்து உள்ளனர்.  இந்த இடைத் தேர்தல்களில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் இரண்டையும் நிராகரித்து விட்டனர். அவர்களுக்கு ஆம் ஆத்மியைத் தோற்கடிப்பது மட்டுமே குறிக்கோளாக இருந்தது. நான் ராஜ்ய சபா எம்.பி. ஆக மாட்டேன். சஞ்சய் அரோரா ராஜினாமா செய்தால், அந்த இடத்துக்கு யாரை எம்.பி. ஆக்குவது என்பதை கட்சியின் அரசியல் விவகாரங்களுக்கான குழு முடிவு செய்யும் என்று அவர் கூறினார்.

இதையும் படிங்க: தொண்டரின் கழுத்தில் ஏறி இறங்கிய கார் டயர்.. ஜெகன் மோகன் ரெட்டிக்கு வந்த புது சிக்கல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share