×
 

பிரதமர் மோடிக்கு இது மட்டும் தான் கரெக்ட்டா வரும்.. விளாசிய ராகுல் காந்தி..!

பொருளாதார ரீதியில் 2014 முதல் நமது உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசு மீது பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மோடி அரசு 2025 பற்றிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், 2047 பற்றிய "கனவுகளை" விற்பதாக ராகுல் காந்தி விமர்சித்தார். இது மக்களின் உண்மையான பிரச்னைகளை அரசு புறக்கணிப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விளிம்புநிலை சமூக இளைஞர்களின் கல்வி வாய்ப்புகளில் உள்ள தடைகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, மோடிக்கு கடிதம் எழுதிய ராகுல்காந்தி, மும்பையில் ஏற்பட்ட ரயில் விபத்து குறித்து, மோடி அரசின் செயலற்ற தன்மையை விமர்சித்தார். இது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு குறித்த அரசின் அலட்சியத்தை பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

இதையும் படிங்க: அள்ளி வீசிய அவதூறுகள்.. டோட்டல் சரணடைதல் வரை..! எதிர்க்கட்சிகளின் மன்னிப்பு நாடகம்..!

இப்படி மோடி அரசின் மீது அடுக்கடுக்கான குற்றசாட்டுகளை முன்வைத்து வரும் ராகுல்காந்தி, தற்போது பிரதமர் நரேந்திர மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால் அவர் எந்த தீர்வுகளையும் வழங்கவில்லை என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது;

"உள்நாட்டு தயாரிப்புகளை ஊக்குவிக்கும் 'மேக் இன் இந்தியா' திட்டம், இந்தியாவில் அதிக அளவில் தொழிற்சாலைகள் பெருகும் என்ற வாக்குறுதியை அளித்தது. ஆனால், இன்று நாட்டில் உற்பத்தி ஏன் குறைந்துள்ளது? வேலையின்மை ஏன் அதிகரித்துள்ளது? சீனாவிலிருந்து இறக்குமதிகள் ஏன் இரட்டிப்பாகியுள்ளன?

பிரதமர் மோடி முழக்கமிடும் கலையில் தேர்ச்சி பெற்றுள்ளார், ஆனால், தீர்வு காண்பதில் அல்ல. பொருளாதார ரீதியில் 2014 முதல் நமது உற்பத்தி 14 சதவீதமாக குறைந்துள்ளது. அரசு இறக்குமதியில்தான் ஆர்வம் காட்டுகிறது. உள்நாட்டு நிறுவனங்களை பெருக்குவதில் அல்ல. இறுக்குமதி அதிகரிப்பால் சீனா லாபம் அடைகிறது. 

நேர்மையான சீர்திருத்தங்கள் மூலமும், நிதி உதவி அளிப்பதன் மூலமும் லட்சக்கணக்கான உற்பத்தியாளர்களுக்கு அதிகாரம் அளிக்கும் அடிப்படை மாற்றமே இந்தியாவுக்குத் தேவை. மற்றவர்களுக்கு ஒரு சந்தையாக இருப்பதை நாம் நிறுத்த வேண்டும்.

உடல் உழைப்பை நாம் மதிக்கத் தொடங்கும் வரை, தெருக்களில் நின்று மணிக்கணக்காக வேலையும், வியாபாரமும் செய்து வரும் மனிதர்களை நாம் மதிக்க மாட்டோம். மேலும் இதன் மையத்தில் 'சாதி' என்ற கருத்து உள்ளது. இதை நாம் வெளிப்படையாக கூற வேண்டும். இந்திய சமூகம் எவ்வாறு அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்கிறது, இந்திய சமூகம் எவ்வாறு மரியாதையை பகிர்ந்து கொள்கிறது என்பதை நாம் சரியாக புரிந்து வேண்டும்."

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மகாராஷ்டிரா தேர்தலில் மேட்ச் பிக்சிங்? முட்டி மோதிக் கொள்ளும் ராகுல்காந்தி Vs தேர்தல் ஆணையம்..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share