துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணனுடன் சந்திப்பு! வாழ்த்து மழை பொழிந்த இபிஎஸ்...
துணை குடியரசு தலைவராக பொறுப்பேற்ற சி.பி ராதாகிருஷ்ணனுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று வாழ்த்து கூறினார்.
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவரும், தற்போது மகாராஷ்டிர ஆளுநராக இருக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், உடல்நலக் காரணங்களைக் காட்டி தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 9, 2025 அன்று நடந்த குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு சி.பி. ராதாகிருஷ்ணனை பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி தனது வேட்பாளராக அறிவித்தது.
சி.பி. ராதாகிருஷ்ணன் 1957 ஆம் ஆண்டு அக்டோபர் 20 அன்று தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவரது அரசியல் பயணம் மிக நீண்டதும், பல்வேறு பொறுப்புகளை உள்ளடக்கியது.
பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு, என் டி ஏ கூட்டணி கட்சி தலைவர்கள் ஆதரவு திரட்டி வந்தனர். செப்டம்பர் ஒண்ணுதாம் தேதி துணை குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெற்ற நிலையில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சுதர்சன் ரெட்டியை தோற்கடித்து சிபி ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். இதையடுத்து நாட்டின் 15 வது குடியரசு தலைவராக சிபி ராதாகிருஷ்ணன், பொறுப்பேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி மூலமும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி... அமித் ஷாவிற்கு நோ சொல்லப்போகிறாரா? - பரபரக்கும் அரசியல் களம்...!
இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து வாழ்த்து சொல்வதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றார். சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்ததுடன் துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுதற்கு வாழ்த்துக்களையும் தனது மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டார். இதனிடையே இன்று இரவு 8 மணி அளவில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் நடக்கும் அரசியல் விவகாரங்கள் தொடர்பாகவும், கூட்டணி விவகாரங்கள் தொடர்பாகவும், அதிமுகவுக்குள் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாகவும் விவாதிப்பார்கள் என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவிக்காக எடப்பாடி பார்த்த உள்ளடி வேலை... முகத்திரையைக் கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்...!