×
 

கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு... மாற்று வழி தேடும் மக்கள்... விறகுகள் விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விறகுகள் விலை மற்றும் பயன்பாடு 2 மடங்கு அதிகரித்துள்ளது.

இந்தியாவில் GAS சிலிண்டர் தட்டுப்பாடு என்ற பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது உலக அளவிலான புவிசார் அரசியல் நெருக்கடியால் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய தாக்கம். முக்கிய காரணம் மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள போர்ச்சூழல். ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதால், உலகின் மிக முக்கியமான எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை தடைபட்டுள்ளது.

வீட்டு உபயோகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, வணிக உபயோக சிலிண்டர்களின் விநியோகம் பல இடங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெங்களூரு, சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் ஹோட்டல்கள், உணவகங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பல உணவகங்கள் தற்காலிகமாக மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வீட்டு உபயோக சிலிண்டர்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு பதுக்கலைத் தடுக்கும் வகையில் முன்பதிவு விதிகளை கடுமையாக்கியுள்ளது. கேரளா உள்ளிட்ட நகரங்களில் உணவகங்கள் 20% முதல் 75% வரை சப்ளை குறைந்ததாக அறிவித்துள்ளன. பல இடங்களில் ஹோட்டல்கள் தற்காலிகமாக மூடப்பட்டன அல்லது மெனு குறைக்கப்பட்டன. சில உணவகங்கள் விறகு அடுப்புக்கு மாறின.

இதையும் படிங்க: பிளாக்கில் சிலிண்டர் விற்பனை... அநியாய கொள்ளை..!! புலம்பித் தவிக்கும் வியாபாரிகள்..!!

இந்த நிலை தமிழ்நாட்டில் குறிப்பாக கடலூர், கோவை, சென்னை போன்ற பகுதிகளில் தீவிரமாக பிரதிபலித்தது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடால் உணவகங்கள் விறகு அடுப்பை நாடின. இதனால் விறகு தேவை திடீரென அதிகரித்தது. கடலூரில் விறகு விற்பனை இரு மடங்கு உயர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விறகு விலை கிலோவுக்கு ரூ.5-லிருந்து ரூ.7 ஆக உயர்ந்துள்ளது. 

 

இதையும் படிங்க: கவலை வேண்டாம்... மாணவர் விடுதிகளில் உணவு தட்டுப்பாடு வராது..!! அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share