பென்குயின் முதல் - பஞ்ச் குரங்கு வரை!! டெல்லி போலிஸ் நூதன விளம்பரம்! குவியும் பாராட்டு!
'அவசர அழைப்பிற்கு, எங்களை எப் போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உதவி செய்யக் காத்திருக்கிறோம்' என கூறும் வகையில் டெல்லி போலீஸ் வெளியிட்டுள்ள விளம்பரம் அனைவரையும் கவர்ந்துள்ளது.
ஜப்பானில் ஒரு மிருகக்காட்சி சாலையில் தன் தாயால் புறக்கணிக்கப்பட்ட குட்டிக் குரங்கு ஒன்று, படிப்படியாக தேறி அங்கிருப்போருடன் நட்பு கொண்டது. அந்த குட்டியை ‘பஞ்ச்’ என்று அழைத்து, அதன் அழகிய சேஷ்டைகளை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வீடியோக்கள் உலக அளவில் பிரபலமடைந்தன.
இதைப் பார்த்த டெல்லி போலீஸ், அதே குட்டிக் குரங்கின் புகைப்படத்தை தங்கள் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) கணக்கில் பகிர்ந்துள்ளது. படத்தில் குட்டிக் குரங்கு ஒரு கையில் டெடி பியர் பொம்மையை இறுக்கமாக அணைத்தபடி, மறு கையால் ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் கையை பிடித்திருப்பது போல தோற்றம் அளிக்கிறது. அந்த புகைப்படத்துடன் டெல்லி போலீஸ் எழுதியுள்ளது:
“அவசர அழைப்பிற்கு எங்களை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம். நாங்கள் உதவி செய்யக் காத்திருக்கிறோம். அவசரத்தில் 112-ஐ அழையுங்கள்!”
இதையும் படிங்க: மனசு வலிக்குது... தேசம் கண்டிராத உயரிய மனிதர்... வேதனையை வெளிப்படுத்திய சீமான்..!!
Punch’s story reminds us - everyone needs someone & we’re always here for you. 💖
— Delhi Police (@DelhiPolice) February 21, 2026
Dial 112#DPUpdates pic.twitter.com/3Y83xjMRM8
இந்த பதிவு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக், ரீட்வீட், கமெண்ட்களை பெற்று வைரலாகியுள்ளது. “குட்டி குரங்கு போலீஸ் கையை பிடித்திருப்பது மிக அழகு”, “டெடி பியரை அணைத்தபடி போலீஸ் கையை பிடிப்பது – அவசரத்தில் நம்பிக்கை தரும் படம்”, “டெல்லி போலீஸ் கிரியேட்டிவ் அப்ளாஸ்!” என்று பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி போலீஸ் அவசர சேவை எண் 112-ஐ மக்களிடம் எப்போதும் நினைவூட்டும் வகையில், இதுபோன்ற க்யூட், உணர்வுபூர்வமான விளம்பரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. ஜப்பான் குரங்கு குட்டியின் கதையை இந்தியாவின் அவசர சேவையுடன் இணைத்து விளம்பரப்படுத்தியது ரொம்பவும் பாராட்டப்பட்டுள்ளது.
மக்களின் அவசர தேவைக்கு எப்போதும் தயாராக இருக்கும் போலீஸாரின் இந்த அணுகுமுறை, சமூக வலைதளங்களில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. “இதுபோன்ற விளம்பரங்கள் தான் போலீஸ் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அவசரத்தில் தயங்காமல் 112-ஐ அழைக்கலாம் என்பதை இந்த க்யூட் படம் மூலம் மீண்டும் நினைவூட்டியுள்ளது டெல்லி போலீஸ். இந்த பதிவு தொடர்ந்து வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கன்னியாகுமரியில் ₹1,785 கோடியில் வளர்ச்சி திட்டங்கள்... முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்!